செய்திகள் :

பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்

post image

சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது.

லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் காதலியிடம் இருந்து 10,000 யுவான் (சுமார் ₹1.24 லட்சம்) கடனாகப் பெற்றிருந்தார். தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக, அவரைத் தேடி வருகிறார்.

1991 ஆம் ஆண்டில் லீயும், மாவும் ஒரு நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தபோது சந்தித்திருக்கின்றனர். அப்போது லீக்கு 23 வயது, மாவுக்கு 25 வயது. மாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் எட்டு ஆண்டுகள் காதலித்திருக்கின்றனர்.

காதல்

லீயின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், லீ தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சுமுகமாகப் பிரிந்தனர்.​

பிரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2001 ஆம் ஆண்டு லீ சொந்தமாகத் தொழில் தொடங்க நினைத்தபோது, அவருக்குப் பண உதவி தேவைப்பட்டது.

அப்போது அவரது முன்னாள் காதலியான மா, எந்தத் தயக்கமும் இன்றி 10,000 யுவான் பணத்தை அவருக்குக் கொடுத்து உதவியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இது ஒரு பெரிய தொகையாகக் கருதப்பட்டது என்று லீ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.​​

பணம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, லீ தனது மொபைல் போனைத் தொலைத்ததால், மாவின் தொடர்பு எண்ணை இழந்தார்.

அன்று முதல் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த அவர், தற்போது "சியோலி ஹெல்ப்ஸ் யூ" என்ற உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் உதவியுடன் மாவைத் தேடி வருகிறார். இந்த தேடுதல் முயற்சிக்கு லீயின் மனைவியும் ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி ... மேலும் பார்க்க

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க