செய்திகள் :

பிரேமலதா வைத்த கோரிக்கை; ஓபிஎஸ் சொன்ன பதில்; சட்டமன்றத்தில் கலகல; என்ன நடந்தது?

post image

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "முதல்வர் விஜய்க்கு உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடபட்டது வரவேற்கதக்கது.

அதேபோல சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கு பேச சம வாய்ப்பு தர வேண்டும். ஆனால் ஆளுநர் உரை ஆளுங்கட்சி உரை போல் இருந்தது. அவரின் உரையில் அத்தனை பிழைகள் இருந்தன. அவரது உரையில் தமிழில் 37 பிழைகள் இருந்தன" என்று கூறினார்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

அப்போது பேசிய சபாநாயகர், "வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் தமிழை உச்சரிக்க முயன்றதையே நாம் பாராட்ட வேண்டும். ஆளுநர் தமிழைக் கற்றுக்கொள்ள ஆர்வமாகத்தான் இருக்கிறார்" என்றார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "உறுப்பினர்கள் இருக்கையில் க்ளாஸில் தண்ணீர் வைப்பதற்குப் பதிலாக தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும்" என்றார். அதற்கு ஓபிஎஸ், "அண்ணியார் நல்ல கருத்தைச் சொல்லியிருந்தாலும் அந்தக் கருத்து ஏற்புடையது அல்ல. சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை எறிவதற்கு வாய்ப்பு இருக்கிறது" எனக் கூறினார். அப்போது சட்டமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

பேச்சைத் தொடர்ந்த பிரேமலதா, "உறுதியாக காவிரி விவகாரத்திலும், மேகதாது விவகாரத்தில் யாரும் நம் உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. நேற்று கருப்பு தினமாக இருந்தது. அமோனியா தாக்குதலால் இவ்வளவு பேர் தமிழகத்தில் பாதித்தது இது முதல் முறை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அவர்களை நேரில் பார்க்கும்போது கண், காதுகளில் இருந்து ரத்தம் வந்தது. ஒரு பெண்ணாக அந்தப் பெண்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. அனைவரும் அவர்களுக்காக இறைவனை வேண்டிக்கொள்வோம்" என்றார்.

MLA-க்கள் கைகொடுப்பார்களா? விசுவாசத்தை விற்றுவிட்டதாக அதிருப்தி MP-க்கள் மீது ஆதித்ய தாக்கரே சாடல்

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்கள் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று மாலை முறைப்படி ஏக்நாத் ஷிண்டே... மேலும் பார்க்க

மேகதாது அணை: `புதிய நடுவர் மன்றத்தை தமிழ்நாடு அரசு நாடுவதே ஏன்?' - தங்கம் தென்னரசு விளக்கம்

மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, மேகதாது அணைமீதான தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்தத் தீ... மேலும் பார்க்க

"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநிதி ஸ்டாலின் உரை

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' - தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்ப... மேலும் பார்க்க

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்!

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நேற்று (ஜூன் 21, 2026) பேச்சுவார... மேலும் பார்க்க

'தண்ணீர் பாட்டிலா... டம்ளரா... எதை தூக்கி வீசலாம்?' - மாறி மாறி கலாய்த்த பிரேமலதா - ஓ.பி.எஸ்!

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது.பிரேமலதா ... மேலும் பார்க்க