செய்திகள் :

பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் பதவியேற்பு

post image

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. இதையடுத்து நேற்று பாட்னாவில் கூடிய பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டமன்ற தலைவராக நிதீஷ் குமாரை தேர்ந்தெடுத்தனர்.

இன்று பாட்னா காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடந்தது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நிதீஷ் குமாருக்கு மாநில ஆளுநர் ஆரிப் மொகமத் கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பா.ஜ.கவின் சாம்ராட் செளதரி, விஜய் குமார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல்வரையும் சேர்த்து மொத்தம் 20 பேர் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். நிதீஷ் குமார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் சட்டமேலவை உறுப்பினராக இருக்கிறார்.

அவர் தற்போது 10வது முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். விழாவை காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அவர்களை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வையை எடுத்து அதனை கொடி அசைப்பது போன்று அசைத்தார்.

கூட்டத்தினரும் தங்களிடம் இருந்த கொடியை அதே போன்று காட்டினர். அமைச்சரவையில் லோக் ஜன்சக்தி கட்சி, ராஷ்ட்ரீய லோக் மஞ்ச், மதசார்பற்ற அவாமி மோர்ச்சா கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி கிடைத்து இருக்கிறது.

தற்போது சிக்கிம் தலைவர் பவன் தான் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற பெயருடன் இருக்கிறார். நிதீஷ் குமார் 5 ஆண்டுகள் முதல்வராக இருநதுவிட்டால் நாட்டில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெயர் நிதீஷ் குமாருக்கு கிடைக்கும்.

'10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டைக்கட்டை போடுவதாக மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தி... மேலும் பார்க்க

'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையில் சுமார் 257 சதுர கிமீ தூரம் வரவுள்ள மெட்ரோ திட்டம் குறித்து திமுக அரசு சரியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தவறான தரவுகளை வைத்து... மேலும் பார்க்க

ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு ஆதரவாகவும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னா... மேலும் பார்க்க

கழுகார் : டெல்லி அசைன்மென்ட்; கன்ஃபியூஸ் ஆன நயினார் டு டெல்லி வழி சிபாரிசு; கடம்பூர் ராஜூ டென்ஷன்!

டென்ஷனாகும் கடம்பூர் ராஜூ!டெல்லி வழியாக சிபாரிசு...2026 சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து சந்திக்க ஏற்பாடாகிவருகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்து இரு தரப்புக்குமிடையே இன்னும் பே... மேலும் பார்க்க

மெட்ரோ விவகாரம்: `பெருந்தன்மையான ஒப்புதலை மதிக்காமல்.!' - மனோகர் லால் கட்டார் விளக்கம்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு... மேலும் பார்க்க

கோவை: "விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை?" - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து தற்போது பதிவிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க