செய்திகள் :

புதிய கட்சி தொடக்கமா? டெல்லி பறக்கும் அண்ணாமலை! - பின்னணி என்ன?

post image

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது பல அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சூழலில் தான் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியாகும் செய்தி கவனம் பெற்றிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

கவனம் ஈர்த்த அண்ணாமலை

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தொடர்ந்து குரல் கொடுப்பது, குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தின் தன்னை சாட்டையால் அடித்துகொண்டது, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டது, அரசியல் படிபபிற்காக வெளிநாடு சென்றது என பல விஷயங்கள் மூலம் கவனத்தைப் பெற்று தமிழகத்தில் பாஜக இருப்பை பதிவு செய்துகொண்டே இருந்தார் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை.

கருத்து மோதல்கள்...

இருப்பினும், அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து மோதல்களின் காரணமாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்தத் தலைமை மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக பாஜகவிற்குள் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் முழுமையாக விலகிக்கொண்டார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை - அ.தி.மு.க - பா.ஜ.க
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை - அ.தி.மு.க - பா.ஜ.க

பதவி கொடுக்காத பாஜக

இதனிடையே சிபிஎஸ்இ விவகாரத்தில் விமர்சித்து கருத்து வெளியிட, அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற கருத்துகள் தீவிரமடைந்தன.

மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவருக்கு, தற்போது வரை கட்சியிலோ அல்லது மத்திய அரசிலோ எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை.

மறுபுறம், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, தான் அதே பதவியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்குத் தேசியத் தலைமை சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு மீண்டும் மாநிலத் தலைவர் பதவி கிடைப்பது சந்தேகமாக மாறியுள்ளது.

ஆலோசனையில் அண்ணமாலை

இந்த இக்கட்டான சூழலில்தான், தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை நோக்கி நகர்ந்துள்ள அண்ணாமலை, ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைச் சந்தித்துச் சமீபத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், தன் வாழ்க்கையின் எந்தவொரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பும் இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணாமலை, இந்த முறையும் நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார்.

அண்ணாமலை - நிதின் நபின்
அண்ணாமலை - நிதின் நபின்

நிதின் நபினுடன் சந்திப்பு

வரும் ஜூன் 4-ம் தேதி, தனது புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிவுள்ளது.

நாளை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சந்திப்புக்கு பிறகு அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!

'என்னை கைது செய்துவிடுவார்கள் என்று குடும்பம் பயப்படுகிறது' இந்தியா வரும் அபிஜீத் திப்கே - எதற்கு?

சில நாள்களாக, இந்திய அரசியலை கலக்கிய ஒரு சொல் - 'காக்ரோச் ஜனதா கட்சி'. 'கரப்பான்பூச்சி' என்ற சொல் பேசுபொருள் ஆனதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் காரணமாக இருந்தாலும், 'காக்ரோச் ஜனதா கட்ச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: சமுதாயக் கூடத்தில் இயங்கும் அரசுக் கல்லூரி; நிலையான கட்டடத்திற்கு ஏங்கும் மாணவர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, 2020-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கப்பட்டது.ஆரம்பத்தில் இக்கல்லூரியானது தேரழுந்தூர் கம... மேலும் பார்க்க

”அடுத்த ஜெம்னத்திலும் எளிய தொண்டனாக இருக்கணும்” - உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக நிர்வாகி உருக்கம்

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்கார தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(32). பூக்கடை நடத்தி வந்த இவர் அதிமுக-வில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராகப் பொறுப்பில... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்: புதுக்கோட்டையில் போலீஸ் தடை! - காட்டமான ஆவணப்பட இயக்குநர்கள்!

புதுக்கோட்டையில் நேற்று ( 31-5-2026 ) அரங்கேறிய அந்தச் சம்பவம், தமிழ்நாட்டின் முற்போக்கு மற்றும் ஜனநாயகச் சக்திகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மத நல்லிணக்கத்தைப் பேசும் ஒரு ஆவண... மேலும் பார்க்க

``இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள்; வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்' - அதிமுக ராஜ் சத்யன்

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தவெகவில் இணைந்த நிலையில் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் த... மேலும் பார்க்க

`நேபாளமும் இந்தியாவில் ஆக்கிரமித்துள்ளது; இப்போ தான் தெரியவந்தது' - அதிர்ச்சி கிளப்பிய நேபாள பிரதமர்

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு புதிய அதிரடி திருப்பத்தை சந்தித்துள்ளது. "இந்தியா மட்டும்தான் நேபாளத்தின் பகுதிகளை ஆக்கிரமித்... மேலும் பார்க்க