செய்திகள் :

புதிய கட்சி தொடக்கமா? டெல்லி பறக்கும் அண்ணாமலை! - பின்னணி என்ன?

post image

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது பல அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சூழலில் தான் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியாகும் செய்தி கவனம் பெற்றிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

கவனம் ஈர்த்த அண்ணாமலை

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தொடர்ந்து குரல் கொடுப்பது, குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தின் தன்னை சாட்டையால் அடித்துகொண்டது, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டது, அரசியல் படிபபிற்காக வெளிநாடு சென்றது என பல விஷயங்கள் மூலம் கவனத்தைப் பெற்று தமிழகத்தில் பாஜக இருப்பை பதிவு செய்துகொண்டே இருந்தார் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை.

கருத்து மோதல்கள்...

இருப்பினும், அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான கருத்து மோதல்களின் காரணமாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவர் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்தத் தலைமை மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக பாஜகவிற்குள் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் முழுமையாக விலகிக்கொண்டார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை - அ.தி.மு.க - பா.ஜ.க
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை - அ.தி.மு.க - பா.ஜ.க

பதவி கொடுக்காத பாஜக

இதனிடையே சிபிஎஸ்இ விவகாரத்தில் விமர்சித்து கருத்து வெளியிட, அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற கருத்துகள் தீவிரமடைந்தன.

மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவருக்கு, தற்போது வரை கட்சியிலோ அல்லது மத்திய அரசிலோ எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை.

மறுபுறம், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, தான் அதே பதவியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்குத் தேசியத் தலைமை சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு மீண்டும் மாநிலத் தலைவர் பதவி கிடைப்பது சந்தேகமாக மாறியுள்ளது.

ஆலோசனையில் அண்ணமாலை

இந்த இக்கட்டான சூழலில்தான், தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை நோக்கி நகர்ந்துள்ள அண்ணாமலை, ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைச் சந்தித்துச் சமீபத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், தன் வாழ்க்கையின் எந்தவொரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பும் இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணாமலை, இந்த முறையும் நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார்.

அண்ணாமலை - நிதின் நபின்
அண்ணாமலை - நிதின் நபின்

நிதின் நபினுடன் சந்திப்பு

வரும் ஜூன் 4-ம் தேதி, தனது புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிவுள்ளது.

நாளை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சந்திப்புக்கு பிறகு அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க