செய்திகள் :

பெயரே இல்லாத ரயில் நிலையம்; மஞ்சள் பலகை மட்டுமே அடையாளம் - சுவாரஸ்யத் தகவல்

post image

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் இருக்கும். ஆனால் எந்தப் பெயரும் எழுதப்படாமல், வெறும் மஞ்சள் பலகையுடன் செயல்படும் ஒரு விசித்திரமான ரயில் நிலையம் இந்தியாவில் உள்ளது என்பது தெரியுமா? இந்த நிலையம் எங்கு இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

மேற்கு வங்கத்தின் பர்பா பர்தமான் மாவட்டத்தில், பர்தமான் நகரத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது.

Representational Image

இந்த நிலையம் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், ரயில்வே நிர்வாகம் இந்த நிலையத்திற்கு 'ரெய்னாகர்' என்று பெயரிடத் திட்டமிட்டது. ஆனால் அருகிலுள்ள இரண்டு கிராமங்களின் மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று விரும்பியதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்த தகராறு நீதிமன்றம் வரை சென்று, இதற்கான விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம், பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை நிலையத்தின் பெயர்ப் பலகையில் இருந்து பெயரை நீக்குமாறு உத்தரவிட்டது.

அன்று முதல் இந்த நிலையத்தின் பெயர்ப் பலகை காலியாகவே உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் இதை 'பெயரில்லாத நிலையம்' என்று அழைக்கத் தொடங்கினர். தற்போது அந்த வெற்று மஞ்சள் பலகையே இந்த நிலையத்தின் அடையாளமாக மாறிவிட்டது.​

அதிவிரைவு ரயில்கள் இங்கு நிற்பதில்லை. இங்கு இருக்கும் டிக்கெட் கவுன்ட்டரில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் 'ரெய்னாகர்' என்ற பெயரே அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் நிலையத்தின் பலகை மட்டும் பெயர் இல்லாமல் காலியாகவே இருக்கிறது.

மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த நிலையம் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்குமாம். அன்றைய தினம் நிலைய மாஸ்டர் டிக்கெட் கணக்குகளை ஒப்படைப்பதற்காக பர்தமான் செல்வதால், ரயில் சேவைகள் எதுவும் இயக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி ... மேலும் பார்க்க

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க