செய்திகள் :

பெயரே இல்லாத ரயில் நிலையம்; மஞ்சள் பலகை மட்டுமே அடையாளம் - சுவாரஸ்யத் தகவல்

post image

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் இருக்கும். ஆனால் எந்தப் பெயரும் எழுதப்படாமல், வெறும் மஞ்சள் பலகையுடன் செயல்படும் ஒரு விசித்திரமான ரயில் நிலையம் இந்தியாவில் உள்ளது என்பது தெரியுமா? இந்த நிலையம் எங்கு இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

மேற்கு வங்கத்தின் பர்பா பர்தமான் மாவட்டத்தில், பர்தமான் நகரத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது.

Representational Image

இந்த நிலையம் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், ரயில்வே நிர்வாகம் இந்த நிலையத்திற்கு 'ரெய்னாகர்' என்று பெயரிடத் திட்டமிட்டது. ஆனால் அருகிலுள்ள இரண்டு கிராமங்களின் மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று விரும்பியதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்த தகராறு நீதிமன்றம் வரை சென்று, இதற்கான விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம், பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை நிலையத்தின் பெயர்ப் பலகையில் இருந்து பெயரை நீக்குமாறு உத்தரவிட்டது.

அன்று முதல் இந்த நிலையத்தின் பெயர்ப் பலகை காலியாகவே உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் இதை 'பெயரில்லாத நிலையம்' என்று அழைக்கத் தொடங்கினர். தற்போது அந்த வெற்று மஞ்சள் பலகையே இந்த நிலையத்தின் அடையாளமாக மாறிவிட்டது.​

அதிவிரைவு ரயில்கள் இங்கு நிற்பதில்லை. இங்கு இருக்கும் டிக்கெட் கவுன்ட்டரில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் 'ரெய்னாகர்' என்ற பெயரே அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் நிலையத்தின் பலகை மட்டும் பெயர் இல்லாமல் காலியாகவே இருக்கிறது.

மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த நிலையம் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்குமாம். அன்றைய தினம் நிலைய மாஸ்டர் டிக்கெட் கணக்குகளை ஒப்படைப்பதற்காக பர்தமான் செல்வதால், ரயில் சேவைகள் எதுவும் இயக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

திருப்பதியில் ஏமாற்றம்: சொந்தமாக கோயில் கட்டிய விவசாயி - ஆனால் கடைசியில் நடந்தது என்ன?

ஆந்திராவில் தனியார் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசா-காசிபுக்கா பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவா... மேலும் பார்க்க

தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.3000 கோடி சொத்து பறிமுதல்; அமலாக்கப்பிரிவு அதிரடி மேலும் தொடருமா?

தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால், அவரது பல நிறுவனங்கள் திவாலானது. இதைத் தவிர, யெஸ் வங்கி உட்பட பல வங்கிகளில் கடன் வாங்கியதும், ... மேலும் பார்க்க

Golden Toilet: 101 கிலோ தங்கத்தில் கழிவறைக் கோப்பை; 10 மில்லியன் டாலர் செலவு - எங்கே தெரியுமா?

புதிய வீடுகளை கட்டுபவர்கள் இன்றைக்கு புதுப்புது வடிவங்களில் கழிவறைகளை அமைத்து வருகின்றனர். கழிவறைகளுக்காகவே பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் குடும்பங்களும் உள்ளன. இப்படிப்பட்ட ஆடம்பர கழிவறைகளை விரும்பு... மேலும் பார்க்க

``விழிப்புடன் இருங்கள்; இல்லாவிட்டால் அனகொண்டா வந்துவிடும்" - எச்சரித்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் அடுத்த ஓரிரு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷன், தலைமை தேர்தல் கமிஷனிடம்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித்பவார் எரிச்சல்

விவசாயிகள் கடனை தள்ளுபடிநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். எந்த புதிய அரசு பதவியேற்றாலும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய தயங்குவதில்லை. ... மேலும் பார்க்க

சென்னை: பாரம்பர்ய உடை அணிந்து 'தமிழ்நாடு தினம்' கொண்டாடிய கல்லூரி மாணவிகள் | Photo Album

தமிழ்நாடு நாள் எது? ஏன் இந்தச் சர்ச்சை? மாநில உரிமைகளைப் பாதுகாப்பது எப்படி? மேலும் பார்க்க