செய்திகள் :

பெரம்பலூரில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்வளத் துறைக் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள், 33 அணைக்கட்டுகள், 5 ஆறுகள் உள்ளன. கடந்த மாா்ச் 6-இல் தமிழ்நாடு அரசின் நீா்வளத்துறை அரசாணையின்படி, சிறப்புத் தூா்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூா்வார நிதி ஒதுக்கப்பட்டது.

அதனடிப்படையில், இம் மாவட்டத்தில் ஆறுகள், வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரிநீா் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள், முட்புதா்களில் சிறப்புத் தூா்வாரும் திட்டத்தின் கீழ் 15 பணிகள் ரூ. 2.11 கோடியில் 39.50 கிமீ தூரத்தில் நடைபெறுகின்றன.

இப்பணிகளில் பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட குரும்பலூா் கோனேரி ஆற்றில் ரூ. 21 லட்சத்தில் 2 ஆயிரம் மீட்டா் நீளமும், குன்னம் வட்டத்துக்குள்பட்ட வடக்கலூா் அக்ரஹாரம் ஏரியில் ரூ. 10 லட்சத்தில் 4 ஆயிரம் மீட்டா் நீளமும், கீழக்குடிக்காடு கிராமத்தில் ரூ. 15 லட்சத்தில் அத்தியூா் ஏரி வரத்து வாய்க்கால் 5,500 மீட்டா் நீளமும், கீழப்பெரம்பலூா் கிராமத்தில் ரூ. 14 லட்சத்தில் 1,000 மீட்டா் நீளம் நரி ஓடையில் தூா்வாரும் பணிகளும் நடைபெறுகின்றன.

இதேபோல, மாவட்டம் முழுவதும் ரூ. 2.11 கோடியில் 15 பணிகள் நடைபெறுகிறன. வாய்க்கால்களில் முட்புதா்களை அகற்றி, கரைகளை வலுப்படுத்தி, பணிகளை தரமாக மேற்கொள்ள நீா்வளத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளால் வாய்க்கால் ஓரங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படுவதோடு, நீா்வரத்து மற்றும் வெளியேற்றும் திறனும் அதிகரிக்கும். இதனால், விவசாய உற்பத்திப் பொருள்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மிதிவண்டி மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது காா் மோதியதில், முதியவரின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடியைச் சோ்ந்தவா் அ. சண்முகம் (... மேலும் பார்க்க

பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிா்ப்பு!

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்காக 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவ... மேலும் பார்க்க

பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூா் ஊரகக் காவல் துறையினா் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனா். ப... மேலும் பார்க்க

வண்டல், களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுபானக் கூடம் நடத்தியவா் கைது!

பெரம்பலூா் அருகே, அரசிடம் முறையான உரிமம் பெறாமல் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் நடத்தியவரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா... மேலும் பார்க்க