செய்திகள் :

"பேசி சரிபண்ணிட்டேன்" - மின்சாரம் பாய்ந்து இறந்த ஐடிஐ மாணவர்; அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் பதில்

post image

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலர் பரஞ்ஜோதி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதற்காக, நேற்று முன்தினம் கட்டடத்திற்கு மின்விளக்கு அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

அப்போது, அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த பைத்தம்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு மாணவர் கருணா (வயது: 20) என்பவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.

திறப்பு விழா அழைப்பிதழ்
திறப்பு விழா அழைப்பிதழ்

இதில், நிலைதடுமாறி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த கருணாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி கருணா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் தரப்பிலிருந்து உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கருணாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முசிறி கைகாட்டி பகுதியில் திருச்சி - நாமக்கல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அனால், எம்.எல்.ஏ தரப்பில், "கான்ட்ராக்டர்தான் அந்தப் பையனை அழைத்து வந்தார். எனவே, அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'' என்று கூறி மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், கோபமான மாணவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

karuna

இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி காவல் ஆய்வாளர் செல்லதுரை மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு காவல் நிலையம் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறந்துபோன மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. முதல்கட்டமாக ரூ. 50,000 வரை கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி - நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், தமிழர் தேசம் கட்சியினர், ''அப்பாவி இளைஞனின் இறப்பை மூடிமறைக்கும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர்.

selvaraj

இந்த விவகாரம் குறித்து, முசிறி தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜிடம் பேசினோம்.

"கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டான். மின்சாரம் தாக்கி இறக்கவில்லை. தவறாகப் பரப்புகிறார்கள். அந்தப் பையனின் குடும்பத்தினரைப் பார்த்துப் பேசி சரிபண்ணிவிட்டேன்" என்றார்.

சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்

இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-99 காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தானமாக வழங்கினார். அந்தத்... மேலும் பார்க்க

`400 மீட்டர் பயணத்துக்கு ரூ.18,000' - அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றிய மும்பை டாக்சி டிரைவர்

மும்பைக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக மும்பையில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சிகள் மீட்டரில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: தடையை மீறி தீபமலை மீது ஏறிய பிக்பாஸ் அர்ச்சனா - வைரலான பதிவு; அபராதம் விதித்த வனத்துறை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தீப மலையைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலை உச்சியில் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை மீது ஏறுவதற்கு போத... மேலும் பார்க்க

இளம் பெண் பாலியல் வன்கொடுமை; சிக்கிய மூவர் - சென்னை அரசு கல்லூரி கேன்டீனில் நடந்த கொடூரம்

சென்னையில் அரசு கல்லூரி ஒன்றின் வளாகத்தில் கோட்டூரை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக கேன்டீன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி தம்பதிக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு - சென்னையைச் சேர்ந்த பெற்றோர் உட்பட 8 பேர் கைது

சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை, கிஷ்ணகிரியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவத்தில் குழந்தை மீட்கப்பட்டு குழந்தையின் பெற்றோர் உட்பட 8 பேர் கைது ச... மேலும் பார்க்க

`திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?' - ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை; வலுக்கும் கண்டனங்கள்

சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.மதுப... மேலும் பார்க்க