செய்திகள் :

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

post image

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நடந்த போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி பகுதி நேர ஆசிரியர் கண்ணன் என்பவரும் பங்கேற்றார். ஆசிரியர் கண்ணன், ரோஸ் நகர் பகுதியை சேர்ந்தவர். இவர் பெரம்பலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவருக்கு சிவராதை என்ற மனைவியும், +2 படிக்கும் மகனும் உள்ளார். இவர் 2013-ல் பகுதிநேர ஆசிரியராக பணிக்கு சேர்ந்துள்ளார்,

தொடர்ந்து ஆறு நாட்களாக போராட்ட களத்தில் இருந்து வந்த அவரை போலீஸார் கைது செய்து வானகரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். அங்கு வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார் கண்ணன். அதனால் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததால் சக ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆசிரியர்கள் போராட்டம்

உடனடியாக அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த கண்ணன், இன்று (14.1.2026) உயிரிழந்தார். இந்தத் தகவல் காட்டு தீ போல பரவியதையடுத்து ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவியது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர், “அரசின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம்” என குற்றம்சாட்டினர். கண்ணனின் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் கண்ணன் உயிரிழந்ததையடுத்து டிபிஐ வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் கண்ணனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது. அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு ஆசிரியர் கண்ணனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் - மனைவி கையை வெட்டிய முதியவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாடோடியின குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவரின் மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். பிள்ளைகள் மூவரும் திருமணமாகி ... மேலும் பார்க்க

வேலூர்: கடந்த ஓராண்டில் 184 குட்கா வழக்குகள் - 220 பேர் கைது; வங்கிக் கணக்குகள் முடக்கம்!

வேலூர் மாவட்டத்தில், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது மாவட்டக் காவல்துறை. அதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி தொடங்கி, 2026 ஜனவரி 12-ம் தேதியான நேற்று முன்தினம்... மேலும் பார்க்க

வேலூர்: யானை தந்தங்களுடன் சிக்கிய 3 இளைஞர்கள் - கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல நீடிக்கும் குழப்பம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பாஸ்மார்பெண்டா மலை கிராம வனப்பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 7 வயது ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்துக் கிடந்தது. அதைத்தொடர்ந்து, நவம்பர் மாதம்... மேலும் பார்க்க

`அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை' - மோடி குறித்து கேள்வி; இங்கிலாந்து டாக்டருக்கு நிகழ்ந்தது என்ன?

இங்கிலாந்தில் டாக்டராக இருப்பவர் சங்க்ராம் பாட்டீல். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் என்ற இடத்தை சேர்ந்த சங்க்ராம் பாட்டீல் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழ்ந்து குடியுரிமை பெற்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டா... மேலும் பார்க்க

தெலங்கானா : `கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம்' என 500 தெருநாய்களை கொன்ற பஞ்சாயத்து தலைவர்கள்

தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்டவர்கள் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தெருநாய்கள் மற்றும் குரங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்று குறிப்ப... மேலும் பார்க்க