செய்திகள் :

மதுப்பழக்கம்: வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு; கண்டித்த மாமியாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர்

post image

நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

இதில் துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார்.

ஆறுமுகநயினாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், சரியாக வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மனைவியை அடித்து துன்புறுத்தி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பின்னர் அவர்கள் சமரசம் செய்து வைப்பதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட வள்ளியம்மாள்

இதனால் ஆறுமுகநயினாரின் மாமியாரான வள்ளியம்மாள் அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில், மீண்டும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துர்காதேவி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை தனது மனைவியை பார்ப்பதற்காக துர்காதேவியின் வீட்டிற்கு ஆறுமுகநயினார் வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முற்றத்தில் படுத்திருந்த வள்ளியம்மாள், ஆறுமுகநயினாரை அவதூறாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அரிவாளால் வள்ளியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், அவருக்கு தலை, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்த நிலையில் உயிரிழந்தார். இதை தடுக்கவந்த துர்காதேவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்து, காயமடைந்தார்.

வள்ளியம்மாள் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து அவரது மகள் துர்காதேவி போனில் தந்தை செல்லப்பாவிற்கு தகவல் கூறியுள்ளார். இதையடுத்து அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளார் செல்லப்பா. அங்கு போலீஸார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.

போலீஸ் விசாரணை

அப்போது செல்லப்பாவிடம் போனில் பேசிய ஆறுமுகநயினார், “என்ன மாமா எப்படி இருக்கீங்க? வீட்டுக்குப் போனீங்களா ஏதும் விசேஷம் உண்டா?” என கேள்வி கேட்டு மாமியார் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள முயன்றுள்ளார்.

பின்னர்தான் ஆறுமுகநயினார் தன் மனைவி வள்ளியம்மாளை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிய வந்தது. வீட்டில் ஹாயாக கட்டிலில் படுத்திருந்த ஆறுமுகநயினாரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க