செய்திகள் :

முத்துநாயக்கன்பட்டியில் புதிய கட்டடங்கள் திறப்பு

post image

பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு இரு புதிய கட்டடங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். பின்னா், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொதுவிநியோகத் திட்டப் பொருள்களை அமைச்சா் வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் ரூ.400 கோடியில் 333 மெட்ரிக் டன் நெல் மணிகளை சேமிக்கும் வகையில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் 2.21 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க 3.74 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், 2.74 லட்சம் அரிசி மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசி வெளி மாநிலங்களிலிருந்து வாங்கப்படுகிறது. இந்திய உணவுக் கழகத்தில் ரூ.22.50-க்கு வாங்கப்பட்ட ஒரு கிலோ அரிசி தற்போது, ரூ.35-க்கு வாங்கப்படுகிறது என்றாா் அவா்.

இதில் மாவட்ட துணைச் செயலா் ராஜாமணி, ஒன்றியச் செயலா் சுப்ரமணி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவுநேர மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், செம்பட்டி, பழைய செம்பட்டி, எஸ். பாறைப்பட்டி, கோடாங்கிப்பட்டி, மல்ல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கம்

கொடைக்கானலில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.இங்குள்ள அண்ணா சாலைப் பகுதி, கே.சி.எஸ். திடல் பகுதிகளில் இந்த இயக்கம் நடைபெற்றது. அப்போது பொதுமக... மேலும் பார்க்க

சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து: உறுப்பினா் கைது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.கொடைக்கானல் ஆனந்தகிரி 3-ஆவது தெரு கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது

பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவ... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்... மேலும் பார்க்க