செய்திகள் :

மும்பை மாநகராட்சித் தேர்தல்: 100 வார்டுகளைக் கேட்டுப் போராடிய ஷிண்டே; 90 வார்டுகளைக் ஒதுக்கிய பாஜக

post image

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

இதற்காக தொகுதிப் பங்கீடு இரு கட்சிகளிடையே கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து நடந்து வந்தது. இப்பேச்சுவார்த்தையில் சிவசேனா தங்களுக்கு 100க்கும் அதிகமான வார்டுகள் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தது. இது தொடர்பாக இரு கட்சித் தலைவர்களும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையில் சிவசேனாவிற்கு 70 வார்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்தது. ஆனால், 100க்கு மேல் இடங்கள் வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருந்தார். இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நேரடியாகச் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மும்பை மாநகராட்சித் தேர்தல்
மும்பை மாநகராட்சித் தேர்தல்

நீண்ட இழுபறிக்குப் பிறகு சிவசேனாவிற்கு 90 இடங்களை பா.ஜ.க ஒதுக்கியுள்ளது.

இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் கூறுகையில், ''எங்கள் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. நாங்கள் இப்போது கூட்டாகப் பிரசாரம் செய்வோம். மஹாயுதியின் மேயர் மும்பை மாநகராட்சியில் அமர்வதை உறுதி செய்வோம். பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும். சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

சிவசேனா சார்பாகப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ராகுல் ஷெவாலே இதுகுறித்து கூறுகையில், ''தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக இருந்தது. தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து பா.ஜ.க 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ராக்கி ஜாதவ் நேற்று பா.ஜ.கவில் சேர்ந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க சீட் கொடுத்திருக்கிறது. இதே போன்று காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் தேவேந்திர அம்பேகர் அக்கட்சியிலிருந்து விலகி சிவசேனா(உத்தவ்)வில் சேர்ந்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 102 பேருக்கு தேர்தலில் போட்டியிட அதிகாரப்பூர்வக் கடிதத்தைக் கொடுத்து இருக்கிறது. காங்கிரஸ் இம்முறை பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மொத்தம் 150 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. இதில் முதல் கட்டமாக 87 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மூன்று எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று வேட்பு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் வேறு கட்சியில் சீட் கிடைக்காமல் வந்தால் அவர்களுக்குக் கொடுக்க சில வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பா,ஜ.கவில் சேர்ந்த ரவி ராஜா 195 வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்த வார்டு தாராவியில் இருக்கிறது. ரவிராஜா அருகில் உள்ள சயான் கோலிவாடாவைச் சேர்ந்தவர். அவரது வார்டு ரிசர்வ் வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தாராவியில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர் தாதரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தினர். தாராவியில் தமிழர்கள் பலர் சீட் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் வெளியில் இருந்து வந்த ரவி ராஜாவிற்கு சீட் கொடுக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க