செய்திகள் :

மூடப்பட்ட வெடி மருந்து தொழிற்சாலையில் NIA அதிகாரிகள் ஆய்வு - திருச்சி பரபரப்பு

post image

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டியில் வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற வெடி மருந்து நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது.

இந்த ஆலையில் கடந்த 2016-ல் நிகழ்ந்த பெரும் வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர், பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் பொதுமக்கள், விவசாய சங்கங்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இந்த ஆலைக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ் (NOC) மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, ஆலை முற்றிலும் மூடப்பட்டது.

இந்த சூழலில், இந்த வெடி மருந்து தொழிற்சாலையில் ஐந்து பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் நேற்று முதல் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆலை இயங்கிய காலத்தில், இங்கிருந்து சுரங்கங்கள் மற்றும் பாறைகளை உடைப்பதற்கான PETN போன்ற வணிக ரீதியிலான வெடிபொருட்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும், கேரளாவில் உள்ள பல தனியார் குவாரிகளுக்கும் சட்டப்பூர்வமாக விநியோகம் செய்யப்பட்டன.

aaivu

விபத்து தொடர்பான வழக்கை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கேரளாவில் அவ்வப்போது நடைபெறும் வெடிவிபத்துகள் அல்லது சட்டவிரோத வெடிபொருள் கடத்தல் வழக்குகளில், சம்பந்தப்பட்ட வெடிபொருட்களின் லேபிள்கள் அல்லது மூலப் பொருட்கள் எங்கு தயாரிக்கப்பட்டன என Nia எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு ஆய்வு செய்வது வழக்கம்.

அந்தவகையில் இந்த வெடி மருந்து தொழிற்சாலையில் NIA சோதனை செய்ததாகச் கூறப்படுகிறது.

மும்பை: மனைவியை Rooster Position இல் நிற்க வைத்து சித்திரவதை; கொடூர கிரிமினல் கணவன் கைது

மும்பை தேவ்னார் பகுதியைச் சேர்ந்தவர் அர்பாஸ் செய்யத். பல்வேறு கிரிமினல் வழக்குகள் அர்பாஸ் மீது இருக்கின்றன. உள்ளூரில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வந்தான். அர்பாஸ் தனது வீட... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

5 மாத திட்டம்; க்ரைம் படங்கள் - தாயை துன்புறுத்திய தந்தை, சித்தி உட்பட 4 பேரை கொன்று எரித்த மைனர்

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் அருகில் ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்சிங். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி சர்க்யன் மற்றும் ராம் சிங்கின் தாயார் மற்றும் உறவி... மேலும் பார்க்க

திருமண வீட்டில் பயங்கரம்!முகமூடி கும்பல் அரிவாள் வெறியாட்டம் – 6 பேர் படுகாயம்; 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ரத்த வெள்ளமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று சினிமாப் படக் காட்சியை... மேலும் பார்க்க

புனேயில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மகாராஷ்டிரா வில் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் சிஞ்ச்வாட் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தால் 8 பேர் உயிரிழந்தனர். ... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!

வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க