செய்திகள் :

ரஞ்சி டிராபி: காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், துபேவுக்கு இடம்!

post image

ரஞ்சி டிராபி காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், ஷிவம் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2024-25 ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை - ஹரியாணா அணிகள் மோதும் காலிறுதிப் போட்டி வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 18 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் ஆல் ரவுண்டருமான ஷிவம் துபேவும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிவந்த ஷிவம் துபே மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இந்தாண்டுக்கான ரஞ்சி டிராபியில் இதுவரை ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாடியுள்ளனர். இவர்களைத் தவிர்த்து 4 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷ் டன்னாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் | சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி செய்ய வேண்டியதென்ன? ரெய்னா பேட்டி!

மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

42 முறை ரஞ்சி டிராபி சாம்பியனான மும்பை அணி ரோஹ்தக்கில் உள்ள சௌதரி பன்சி லால் கிரிக்கெட் மைதானத்தில் ஹரியாணா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

மும்பை அணி விவரம்: அஜிங்கியா ரகானே(கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த், ஹார்திக் தாமோர், சூர்யான்ஷ், ஷர்துல் தாக்குர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோவ்சா, ராய்ஸ்டன், அதர்வா, ஹர்சத் டன்னா.

இதையும் படியுங்கள் |அபிஷேக் சர்மா இன்னும் அதிகமாக பந்துவீச வேண்டும்; முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்தல்!

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வாரா ரோஹித் சர்மா?

இந்தியாவின் கேப்டன்களில் எம்.எஸ்.தோனி மட்டுமே அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளார். இவருக்கு அடுத்து கேப்டனான விராட் கோலி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. தற்போதைய கேப்டன் ரோஹித் சர... மேலும் பார்க்க

3-வது ஒருநாள்: மூவர் அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 241 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடை... மேலும் பார்க்க

எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் விராட் கோலி: பாக். வீரர்

விராட் கோலி உலகத் தரத்திலான வீரர் எனவும், எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் எனவும் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி ... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி; ஷிகர் தவான் கூறுவதென்ன?

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்ஸியில் இந்திய வீரர்கள்!

பாகிஸ்தான் பெயர் பொறித்த சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய வீரர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடை... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்... மேலும் பார்க்க