செய்திகள் :

ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் நூடுல்ஸ், தேநீர் தயாரித்த பெண்; வீடியோ - எச்சரிக்கும் ரயில்வே

post image

நீண்ட தூர ரயில்களில் பயணிகள் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. அதனை வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்தக்கூடாது. ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கூட எடுத்துச்செல்லக்கூடாது. ஒரு முறை ரயிலில் தீப்பிடித்தததால் நீண்ட தூர ரயிலில் சமையலுக்கு கூட தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அப்படி இருக்கும்போது பெண் பயணி ஒருவர் ரயில் பயணத்தில் தான் கொண்டு வந்திருந்த எலக்ட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டுள்ளார். நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டதோடு மட்டுமல்லாது அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்பெண் ஏ.சி.பெட்டியில் பயணம் செய்தபடி இக்காரியத்தை செய்தார். அவர் பகிர்ந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் அப்பெண் பேசிக்கொண்டே எலக்ட்ரிக் சாதனம் மூலம் தண்ணீர் சுட வைக்கிறார்.

எங்கு வேண்டுமானாலும் கிச்சனை அமைத்துக்கொள்ள முடிகிறது என்றும், 15 பேருக்கு தேநீர் தயாரிப்பதாகவும் சிரித்தபடி சொன்னார். இந்த வீடியோ குறித்து மத்திய ரயில்வே கவனத்திற்கு வந்தது. உடனே இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் யார் அந்த வீடியோவை பகிர்ந்தது என்பதை அடையாளம் கண்டு இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர் மீது ரயில்வே சொத்தை தவறாக பயன்படுத்தியதாக ரயில்வே சட்டம் 147(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவை சரிதா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். அவர் தண்ணீர் சுட வைக்கும் பாத்திரம் மூலம் நூடுல்ஸ் தயாரித்தார்.

அதோடு இதுபோன்ற சாதனங்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்க பதிவில், ''ரயில்களுக்குள் எலக்ட்ரிக் கெட்டில்கள், மூழ்கும் கம்பிகள் அல்லது எந்த வெப்பமூட்டும் சாதனங்களையும் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இது போன்ற சாதனங்கள் 1000 முதல் 2000 வாட்ஸ் மின்சாரத்தை இழுக்கும் தன்மை கொண்டது. ஆனால் ரயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்கள் 110V மின்சாரத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான மின்சாரத்தை எடுப்பதன் மூலம் மின் கசிவு, தீ அல்லது பிரேக்கர்களில் ட்ரிப்பிங், விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் ஏசி அமைப்புகளை பாதித்து, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஒவ்வொரு சாக்கெட்டுக்கும் அருகில் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் இருந்தபோதிலும், இதேபோன்ற தவறான பயன்பாடு இதற்கு முன்பும் பதிவாகியுள்ளதாகவும், குற்றவாளிகள் ரயில்வே சட்டத்தின் விதிகளின் கீழ் அபராதம் அல்லது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து நீண்ட தூர ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

Japan: "வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக முடியாது" - ஜப்பானிலுள்ள இந்த வினோத கஃபே பற்றி தெரியுமா?

நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எதுவாக இருந்தாலும், "நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்று வேலையைத் தள்ளிப்போடுவது. இப்படி உள்ளவர்களுக்கென்றே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒரு பிரத்யேக காபி ஷாப் திறக்... மேலும் பார்க்க

'யாரும் நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை' - 82 வயதில் ஸ்கூட்டரில் பறக்கும் மந்தாகினி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த 87 வயதான மந்தாகினி மூதாட்டி, தனது தங்கை உஷாவுடன் புத்துணர்வோடு ஸ்கூட்டரில் நகரை வலம்வரும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.... மேலும் பார்க்க

"என்னை அடிக்கிறாங்க அப்பா" - மராத்தி பேசாததால் அடி; அவமானத்தில் மாணவர் தற்கொலை; தந்தை சொல்வது என்ன?

மும்பையில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி முன்வைத்தது. அவ்வாறு மராத்தி பேசாத கடைக்காரர்களை அக்கட்சியினர் அடித்த சம்பவங்களும் இதற்கு முன்பு... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: சித்ரவதை செய்த மாணவர்கள்; கண்டுகொள்ளாத ஆசிரியர்; 4ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமைரா குமார் மீனா, பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.காலை 11 மணிக்கு பள்ளி வக... மேலும் பார்க்க

போலந்து: காட்டில் கண்டெடுக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்கள் - வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்!

போலந்தில் உள்ள நிசின்ஸ்கா வனப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை தங்க மற்றும் வெள்ளி நாணயங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த நாணயங்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்... மேலும் பார்க்க

`புது ருசி, புது அனுபவம்' - சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி' - என்ன விலை தெரியுமா?

உலகம் முழுவதும் காபி பிரியர்கள் விதவிதமான சுவைகளில் காபி குடித்திருப்பார்கள்., ஆனால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வகை காபி, கேட்பவர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. பீஜிங்கில் 'கரப்பான்... மேலும் பார்க்க