செய்திகள் :

ராமநாதபுரம்: காதலனைப் பிரிய முடியாத காதலி தற்கொலை; துக்கம் தாங்காமல் காதலனும் உயிர் துறந்த சோகம்

post image

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான பாண்டி என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலை சசிகலாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சசிகலாவை அவரது உறவினரான முருகனுக்கு சசிகலாவின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட சசிகலா
தற்கொலை செய்து கொண்ட சசிகலா

இந்நிலையில் கடந்த மாதம் பாண்டியுடன் சசிகலா வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். இது குறித்து சசிகலாவின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து பாண்டியுடன் வசித்து வந்த சசிகலாவை மீட்ட போலீஸார் சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னரும் பாண்டியுடன் சேர்ந்து வாழ முடியாத சோகத்தில் மனமுடைந்து இருந்து வந்துள்ளார் சசிகலா. இதனால் கடந்த சனிக்கிழமை சசிகலா தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட காதலன் பாண்டி
தற்கொலை செய்து கொண்ட காதலன் பாண்டி

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கிருஷ்ணகிரிக்கு கார் ஓட்டிச் சென்றிருந்த பாண்டி, சசிகலா தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தச் சோகத்தில் இருந்து மீள முடியாத பாண்டி கிருஷ்ணகிரியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்பத்தினரின் எதிர்ப்பினால் நிறைவேறாமல் போன காதலால் இரு உயிர்கள் பலியான சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் எடையைக் குறைக்க பரிந்துரையின்றி நாட்டு மருந்து; 'யூடியூப்' வீடியோவால் மாணவிக்கு நேர்ந்த சோகம்

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகள் கலையரசி (வயது 19). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கலையரசி உடல் பருமனாக இருந்துள்ளார்... மேலும் பார்க்க

கேரளா: வீடியோ புகாரால் தற்கொலை செய்த நபர்; பெண் மீது வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில் வசிக்கும் ஷிம்ஜிதா முஸ்தபா(35) என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார்.அதில், பஸ் பயணத்தின்போது ஒரு நபர் தவறான நோக்கத்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சொத்தைப் பிரித்து தர மறுத்த தாய்; கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவரின் மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி... மேலும் பார்க்க

சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை - மருந்து பிரதிநிதி கைது!

சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் பூஜா (24). இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்குமார். இவர் மருந்து பிரதிநிதியாக வேலைப்பார்த்து வருகிற... மேலும் பார்க்க

சென்னை கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்கவைக்க ஸ்பெஷல் டீம் போலீஸ் போட்ட மாஸ்டர் பிளான்; திடுக் தகவல்

சென்னை, மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் ... மேலும் பார்க்க

`715 கோடிக்கு சொத்து; சகோதரியான மனைவி'- பெண் இன்ஜினீயரை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.1.53 கோடி மோசடி!

பெங்களூரைச் சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ (29). சாஃப்ட்வேர் இஞ்ஜினீயரான நவ்யா தனது திருமணத்திற்கு வரன் தேடி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்து வைத்திருந்தார். விஜய் ராஜ் என்பவர் நவ்யாவின் குடும்பத்தை அணுகி நவ... மேலும் பார்க்க