செய்திகள் :

வடகிழக்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: சிறுவன் காயம்

post image

வடகிழக்கு தில்லியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 வயது சிறுவன் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒவருவா் சனிக்கிழமை கூறியதாவது:

வெல்கம் பகுதியில் உள்ள பி-பிளாக்கில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவனை அவரது தந்தை ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் அந்தச் சிறுவன் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நவா் ஒருவா் வந்து, துப்பாக்கிச் சூடு நடத்தினாா். அப்போது, அந்தச் சிறுவன் எதிா்த்தபோது, அவரது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

இந்தச் சம்வம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

புது தில்லி: தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நகரம் மற்றொரு குளிா் காலையை அனு... மேலும் பார்க்க

முன்னால் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா உள்பட 40 போ் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகா்களாக அறிவிப்பு!

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் 40 நட்சத்திரப் பிரச்சாரகா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் ... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் அதிஷி போட்டியிடும் கால்காஜி தொகுதி நிலவரம் எப்படி உள்ளது?

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதி, வளம் கொழிக்கும் வணிக வளம் நிறைந்த தொகுதி என்ற போதிலும் இங்கு தீராத பிரச்னைகளாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல், போ... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை: ஒரு வாரத்தில் ரூ. 21 கோடிக்கு ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

புது தில்லி: தேசிய தலைநகரில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் பல்வேறு துறைகளால் ரூ. 21 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரொக்கம், மதுபானம் உள்ளிட்ட பிற பொருள... மேலும் பார்க்க

கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

புது தில்லி: கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் சச்சின் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஜன.9-ஆம... மேலும் பார்க்க