'வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாள்களில் சீராகும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் ...
'வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாள்களில் சீராகும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சொல்வது என்ன?
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்திருந்தது.
LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவும் நிலையில், பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது.
வாகனங்களில் ஃபுல் டேங்க் நிரப்பியதோடு மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பாட்டில்களிலும், கேன்களிலும் பலர் பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் இன்று (மார்ச் 12) பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், "நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இது போன்ற தருணத்தை எதிர்கொண்டதில்லை. உள்நாட்டு தேவைக்காக LPG விநியோகம் தடையின்றி தொடரும்.
ஹார்முஸ் நீரிணை வழியே வரும் கச்சா எண்ணெய்யை விட மாற்று வழிகளில் கூடுதல் எண்ணெய் வருகிறது.

சீரான எரிப்பொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம்.
தடையின்றி கேஸ் கிடைக்க உறுதி செய்வோம். வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும்.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிப்பொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை. நாட்டிற்கு தேவையான அளவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
















