செய்திகள் :

"விவாகரத்து பற்றி நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை" - வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் பழைய பேட்டி

post image

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்து தெரிவிக்காமல் இருந்தனர். கடந்த ஆண்டு நடந்த முகேஷ் அம்பானி மகன் திருமணத்திற்கு ஐஸ்வர்யா ராய் தனியாகத்தான் வந்தார். அதே சமயம் அமிதாப் பச்சன் குடும்பம் தனியாக வந்தது. ஐஸ்வர்யா எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது மகளுடன் சென்று கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதோடு ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் குடும்பத்திலிருந்து பிரிந்து தனது மகளுடன் தனியாக வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் நிகழ்ச்சிகளில் சேர்ந்தே கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியது இப்போது வைரலாகி இருக்கிறது.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணம்
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணம்

இதில் பேசிய இருவரும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை நடத்தியவர் விவாகரத்து குறித்து ஐஸ்வர்யா ராயிடம் பேசியபோது, அது குறித்து கருத்து தெரிவித்த ஐஸ்வர்யா ராய், விவாகரத்து போன்ற விஷயங்கள் குறித்து நாங்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை என்று குறிப்பிட்டார்.

அபிஷேக் பச்சன் தாயார் ஜெயாபச்சன் குறித்த கேள்விகளையும் ஐஸ்வர்யா ராய் தவிர்த்துவிட்டார். அதேசமயம் அபிஷேக் பச்சன் தனது மனைவியிடம் முதன் முதலில் எப்படி தனது காதலைத் தெரிவித்தேன் என்பது குறித்த தகவல்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது ஹோட்டல் அறையில் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது ஐஸ்வர்யா ராயிடம், என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

"என் உடல் நடுங்கியது; உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டேன்" - தன் மோசமான அனுபவத்தைப் பகிர்ந்த மௌனி ராய்

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் இந்தி நடிகை மௌனி ராய். குறிப்பாக ‘நாகினி' தொடரில் நாகினியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் நடிக்கும்போது... மேலும் பார்க்க

Deepika Padukone: "தாயான பிறகு இதெல்லாம் என்னிடம் மாறியிருக்கிறது!" - தீபிகா படுகோன்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி ‘கிங்’ படத்தில் தீபிகா படுகோன் தற்போது நடித்து வருகிறார்.தீபிகா படுகோன் மற்றொரு பக்கம் அட்லி - அல்லு அர்ஜூன் இயக்கும் படத்திலும் முக்கியமானதொ... மேலும் பார்க்க

'பயோகேஸ் உரம், மாடித்தோட்டம், ஆர்கானிக் முறை' - காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் ரகுல் பிரீத் சிங்

பாலிவுட் நடிகைகளில் அதிகமானோர் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் வைத்திருக்கின்றனர். நடிகை ரேகா தனது வீட்டு வளாகத்தில் தோட்டம் வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் ரகு... மேலும் பார்க்க

``என் கணவருக்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறுவார்கள், ஆனால்'' - பாலிவுட் நடிகர் கோவிந்தா மனைவி

பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர். கோவிந்தா... மேலும் பார்க்க

`காருடன் கடலில் சென்ற பிரபலங்கள்' கடற்கரை பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு வ... மேலும் பார்க்க

Shah Rukh Khan: அம்மாவுக்கு மருந்து வாங்க காசில்லாத வறுமை; 'பாலிவுட் சாம்ராஜ்ய நாயகன்' உருவான கதை

எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொட்டவர்களின் பின்னணி கதை பெரும் பாடமாக இருக்கும். குறிப்பாக திரையுலகில் மாபெரும் இடத்தைப் பிடித்த ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை பலரும் பெரும் துயரத்த... மேலும் பார்க்க