செய்திகள் :

`வெனிசுலா அதிபர் கடத்தப்பட்டதுபோல் மோடியும் கடத்தப்படலாம்'- காங்கிரஸ் தலைவர் பேச்சு; பாஜக கண்டனம்

post image

அமெரிக்க படைகள் இரவோடு இரவாக வெனிசுலாவில் ரெய்டு நடத்தி அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்துச்சென்றன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் இருக்கின்றனர். அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கியூபா, கிரீன்லாந்து உட்பட மேலும் சில நாடுகளை பிடிக்கப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளார். அதேசமயம் இந்தியா மீது அடுக்கடுக்காக வரிகளை விதித்து வருகிறார். இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள்து.

இந்த வரி விதிப்பு மற்றும் வெனிசுலா அதிபர் கடத்தப்பட்டது குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிருத்விராஜ்சவான் பேட்டியளிக்கையில், வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைக் குறிப்பிட்டு, அதுபோன்ற நெருக்கடி இந்தியா மீதும் வருமா என்று பிருத்விராஜ் சவான் கேள்வி எழுப்பினார்.

``வெனிசுலாவில் நடந்தது போன்ற ஒன்று இந்தியாவிலும் நடக்குமா? ட்ரம்ப் நமது பிரதமரைக் கடத்திவிடுவாரா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறுகையில், ``இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரி, இந்தியா-அமெரிக்க வர்த்தகத்தை முடக்கிவிடும். நேரடியாகத் தடை விதிக்க முடியாததால், வர்த்தகத்தை நிறுத்த ஒரு கருவியாக வரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதை இந்தியா தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நமது மக்கள் முன்பு ஈட்டிய லாபம் இனி கிடைக்காது.

நாம் மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கும், அந்தத் திசையில் முயற்சிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன,” என்று கூறினார்.

நான் அப்படி சொல்லவில்லை

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா கடத்துவது குறித்து தெரிவித்த கருத்து குறித்து பிருத்விராஜ் சவானிடம் நிருபர்கள் கேட்டதற்கு,'' ​​அதுபோன்று நான் கருத்து கூறவில்லை. அது போன்று எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்பதே நான் சுட்டிக்காட்ட முயன்ற விஷயம்.

ட்ரம்ப் அண்டை நாடான கொலம்பியாவின் அதிபருக்கும் மிரட்டல் விடுத்தார். அவர் டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்தையும், பனாமாவையும் கைப்பற்றுவது குறித்தும் பேசுகிறார். எனவே, இந்த விஷயத்தில் உலகில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால், லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு சரிந்தது போலவே, ஐக்கிய நாடுகள் சபையின் முழு அமைப்பும் சரிந்துவிடும்.

எனவே, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால், யாருக்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கை இது. இந்தியாவுக்கு ஏதேனும் நடக்கும் என்று நான் கூறவில்லை," என்று சவான் விளக்கினார்.

பா.ஜ.க கண்டனம்

பிருத்விராஜ் சவானின் கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பூனாவாலா இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,''காங்கிரஸ் கட்சியின் இந்திய விரோத கொள்கை அனைத்து எல்லையையும் தாண்டி விட்டது. பிருத்விராஜ் சவானின் கருத்து கண்டிக்கத்தக்கது. சிந்தூர் ஆப்ரேசனின் போது நமது படையை பிருத்விராஜ் சவான் அவமதித்தார். இந்தியாவிற்கு எதிராக காங்கிரஸ் பேசுவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது''என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடி அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். அடுத்த நாளே பிருத்விராஜ்சவான் இது போன்று தெரிவித்துள்ளார். பிருத்விராஜ்சவான் சோனியா காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க