செய்திகள் :

'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்?

post image

'எண்ணெய்க்காகத் தான் எல்லாம்' - வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறைபிடித்த போது, அரசியல் பார்வையாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை.

ட்ரம்ப் பதிவு

இதை உறுதிப்படுத்தும் வகையில், ட்ரம்ப் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

"30 - 50 மில்லியன் பேரல்கள் உயர்தர எண்ணெய்களை வெனிசுலாவின் இடைக்கால அரசு அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்.

அந்த எண்ணெய் சந்தை விலைக்கு விற்கப்படும். அதில் வருகிற பணம் அமெரிக்க அதிபராகிய என்னால் நிர்வாகிக்கப்படும். இந்தப் பணம் வெனிசுலா மக்கள் மற்றும் அமெரிக்காவின் நலனுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதிச் செய்வேன்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்தத் திட்டத்தை உடனே நிறைவேற்றும் படி, எரிசக்தி செயலாளர் கிறிஸிற்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த எண்ணெய்களை அமெரிக்க சேமிப்பு கப்பல்கள் அமெரிக்காவிற்கு நேரடியாக கொண்டு வரும்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்தப் பதிவு 'இது வெறும் ஆரம்பம்' என்பதை காட்டுகிறது.

வெனிசுலா விஷயத்தில் இந்த மாதிரியான நிகழ்வுகளை இனி அடிக்கடி பார்க்கலாம்.

எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொத... மேலும் பார்க்க

கிரீன்லாந்து:``ஒவ்வொருவருக்கும் பணம் கொடுப்போம்" - அமெரிக்க அதிபர் 'சதி': கொந்தளிக்கும் உலக நாடுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும் அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும... மேலும் பார்க்க

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத... மேலும் பார்க்க