செய்திகள் :

கிரீன்லாந்து:``ஒவ்வொருவருக்கும் பணம் கொடுப்போம்" - அமெரிக்க அதிபர் 'சதி': கொந்தளிக்கும் உலக நாடுகள்!

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும் அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள். டென்மார்க்கின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கும் பங்கு இருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விருப்பத்துக்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, ``எந்த ஒரு நாடுக்கும் சொந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த நாடுகளுக்குதான் இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தனர்.

கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன்
கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன்

இந்த நிலையில், கிரீன்லாந்தில் வசிக்கும் 57,000 மக்களுக்கும் பணத்தாசை காட்டி, டென்மார்க்கிடமிருந்து அவர்களைப் பிரிக்க அமெரிக்கா சதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கிரீன்லாந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 டாலர் முதல் 100,000 டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 லட்சம் முதல் ரூ80 லட்சம் வரை) மொத்தமாகப் பணம் கொடுத்து, அவர்களை அமெரிக்காவுடன் இணையச் சம்மதிக்க வைக்கலாம் என்று ஆலோசித்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்த சதி குறித்த தகவலறிந்த டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், ``போதும்... இனி இப்படிப்பட்ட கற்பனைகள் வேண்டாம்" என அமெரிக்காவை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.

ஐரோப்பிய தலைவர்கள், ``கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; அதன் எதிர்காலத்தை அந்த மக்களே தீர்மானிப்பார்கள்" என்று கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

`நீட்' எழுதி தேர்வான 50 மாணவர்கள்; கல்லூரிக்கு திடீர் அனுமதி ரத்து - கொண்டாடிய இந்துத்துவ அமைப்பினர்

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி (SMVDIME) செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 இடங்களுடன் எம்பிபிஎஸ்... மேலும் பார்க்க

மதுரோ–சதாம் ஹுசைன் சிறைபிடிப்பு: இரண்டுமே அமெரிக்கா செய்தது தான்; ஆனால், வித்தியாசம் உண்டு - எப்படி?

கடந்த ஜனவரி 3-ம் தேதி வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவிற்கு சிறைபிடித்து வரப்பட்டார். இதற்கு முன்பு, 2003-ம் ஆண்டு, ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படையினரால் ஈராக்கில் சிறைபிடிக்... மேலும் பார்க்க

தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’... இங்கிலீஷ் ‘எவர்’ - தமிழனின் வெற்றி! | மொழிப்போரின் வீர வரலாறு – 3

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 3‘குண்டுக்கஞ்சோம் வடவர்கள் கூட்டுக்கஞ்சோம் பலபல குண்டர்க்காம் செய்தித்தாள் கூற்றுக்கஞ்சோம் அண்டிற்றா இந்நாட்டில் அயலானின் இந்திம... மேலும் பார்க்க

"தூய்மைப் பணியாளர்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும்" - போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னைக்குள் தொடர் போராட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் (10.01.26) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அரு... மேலும் பார்க்க

கடலூர்: தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0; குவிந்த தொண்டர்கள் | Photo Album

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மா... மேலும் பார்க்க

USA: ``நான் சீன, ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால்.!" - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேட்டி

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உ... மேலும் பார்க்க