செய்திகள் :

சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் - சிக்கியது எப்படி?

post image

சென்னை, திருவல்லிக்கேணி, சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுஜாதா. இவர், வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். 07.01.2026-ம் தேதி மாலத்திரி வேலைக்கு சென்ற பிறகு சுஜாதா வீட்டிலிருந்து துணிகளை தைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஜாக்கெட் தைக்க சுஜாதாவுக்கு ஏற்கெனவே அறிமுகமான திருவல்லிக்கேணியைச் சேர்ந் ஆர்னிப்பள்ளி ரவணம்மா என்பவர் சுஜாதா வீட்டுக்கு வந்தார்.

கைது
கைது

இதையடுத்து போலீஸார், சம்பவம் நடக்கும் போது அங்கிருந்த திருவல்லிக்கேணி அரிசி மண்டி தெருவைச் சேர்ந்த ஆர்னிப்பள்ளி ரவணம்மாவிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் பால்கோவாவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து சுஜாதாவிடமிருந்து தாலிச் செயினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த தாலி செயினை போலீஸார் மீட்டதோடு ரவணம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து ஜாம்பஜார் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட ரவணம்மாவின் சொந்த ஊர் ஆந்திரா. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து கணவரைப் பிரிந்து கூலி வேலை செய்து வருகிறார். போதிய வருமானம் இல்லாததால் ரவணம்மா, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சுஜாதாவிடமிருந்து தாலிச் செயினை திருடுவதற்கு முன்பு 17.12.2025-ம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் மகாராஜன் என்பவரின் வீட்டில் பீரோவில் வைத்திருந்து 20 சவரன் தங்க நகைகளை ரவணம்மா திருடியிருக்கிறார். அதில் 13.5 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளோம்" என்றனர்.

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக... மேலும் பார்க்க

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க