செய்திகள் :

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - சிக்கிய மோசடி கும்பல்

post image

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்பித்து ஏராளமானோர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர்.

அதாவது குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் சன்மானம் அல்லது சம்பளம் வழங்கப்படும் என்று இக்கும்பல் விளம்பரம் செய்து வருகிறது. அப்படியே சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாகாவிட்டாலும் பாதி பணம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வருகின்றனர்.

அதோடு மலிவு வட்டியில் கடன் கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்தனர். பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்றவற்றில் இந்த விளம்பரம் வெளியானது. இலவச பாலியல் உறவு என்றும் இதனை மோசமாக விளம்பரம் செய்தனர்.

இதற்கு ஆசைப்பட்டு சம்பந்தப்பட்ட விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்பவர்களிடம் பதிவுக்கட்டணம் என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை முதலில் இக்கும்பல் வசூலித்து விடுகின்றனர். அதோடு அவர்களுக்கு ஏதாவது 4 முதல் 5 பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர்

அந்த புகைப்படங்களில் எதாவது ஒன்றை சம்பந்தப்பட்ட நபரை தேர்வு செய்தவுடன், அதற்கு பதிவு கட்டணம் அனுப்பும்படி கூறுவது வழக்கம். அதன் பிறகு ஹோட்டல் கட்டணம் என்று அதற்கு குறிப்பிட்ட தொகையை வசூலித்து விடுகின்றனர். இப்படி எதாவது ஒரு காரணத்தை சொல்லி தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் இது மோசடி என்று உணரும் வரை அவரிடம் பணம் வசூலிக்கின்றனர். இது போன்ற மோசடி பீகார் மாநிலம் நவடா பகுதியில் நடந்துள்ளது.

விரைவில் லட்சங்களில் சம்பாதித்துவிடலாம் என்ற ஆசையில் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். இம்மோசடியில் பாதிக்கப்பட்ட பலர் இதை வெளியில் சொன்னால் தனக்குத்தான் பிரச்னை என்று கருதி அதிகமானோர் வெளியில் சொல்லாமல் இருக்கின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிலர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தனர்.

இது பற்றி போலீஸ் அதிகாரி அபினவ் கூறுகையில், ''All India Pregnant Job திட்டத்தில் மோசடி செய்ததாக ரஞ்சன் குமார் மற்றும் ஒரு மைனர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து 4 மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் வேலையிலும் இக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது''என்று குறிப்பிட்டுள்ளார்.

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க

சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் - சிக்கியது எப்படி?

சென்னை, திருவல்லிக்கேணி, சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுஜாதா. இவர், வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். 0... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக... மேலும் பார்க்க

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க