செய்திகள் :

"தூய்மைப் பணியாளர்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும்" - போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு

post image

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னைக்குள் தொடர் போராட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் (10.01.26) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் தூய்மைப் பணியாளர்கள் அனுமதி கேட்டிருந்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ஆனால், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது.

சென்னையின் மண்டலங்கள் 5 மற்றும் 6 இல் குப்பை பேணும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. இதை எதிர்த்து அந்த மண்டலங்களில் பணி செய்து வந்த 1900க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

ரிப்பன் பில்டிங்கின் வெளியே போராட்டத்தைத் தொடங்கியவர்கள், 150 நாட்களைக் கடந்து சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

துறை சார்ந்த அமைச்சர் நேரு மற்றும் அதிகாரிகள் என யாருமே தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதனால்தான் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று முதல் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர்.

தூய்மைப் பணியாளர்களின் மனுவைப் பெற்றுக்கொண்ட சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல இணை ஆணையாளர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் பொது அமைதிக்குப் பாதிப்பும் ஏற்படும் எனக்கூறி போராட்டத்துக்கான அனுமதியை மறுத்திருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

"13 நாளா அந்த ரிப்பன் பில்டிங் முன்னாடி உட்காந்திருந்தோம். எந்த மக்களுக்காவது நாங்க தொந்தரவு கொடுத்தோமா? இப்போ நாங்க போராட அனுமதி கேட்ட எதோ சமூக விரோதிங்க மாதிரி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்னு சொல்றாங்க. இதெல்லாம் நியாயமா?" எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

`நீட்' எழுதி தேர்வான 50 மாணவர்கள்; கல்லூரிக்கு திடீர் அனுமதி ரத்து - கொண்டாடிய இந்துத்துவ அமைப்பினர்

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி (SMVDIME) செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 இடங்களுடன் எம்பிபிஎஸ்... மேலும் பார்க்க

மதுரோ–சதாம் ஹுசைன் சிறைபிடிப்பு: இரண்டுமே அமெரிக்கா செய்தது தான்; ஆனால், வித்தியாசம் உண்டு - எப்படி?

கடந்த ஜனவரி 3-ம் தேதி வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவிற்கு சிறைபிடித்து வரப்பட்டார். இதற்கு முன்பு, 2003-ம் ஆண்டு, ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படையினரால் ஈராக்கில் சிறைபிடிக்... மேலும் பார்க்க

தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’... இங்கிலீஷ் ‘எவர்’ - தமிழனின் வெற்றி! | மொழிப்போரின் வீர வரலாறு – 3

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 3‘குண்டுக்கஞ்சோம் வடவர்கள் கூட்டுக்கஞ்சோம் பலபல குண்டர்க்காம் செய்தித்தாள் கூற்றுக்கஞ்சோம் அண்டிற்றா இந்நாட்டில் அயலானின் இந்திம... மேலும் பார்க்க

கடலூர்: தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0; குவிந்த தொண்டர்கள் | Photo Album

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மா... மேலும் பார்க்க

USA: ``நான் சீன, ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால்.!" - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேட்டி

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உ... மேலும் பார்க்க

டார்கெட் Greenland: "நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.!" - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

வெனிசுலாவைக் கைப்பற்றியதை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லேண்டிற்கு தற்போது குறி வைத்திருக்கிறார். இது புதிய குறி அல்ல... அவர் முதல்முறை அமெரிக்க அதிபராக பதவியேற்ற போதே வைத்த குறி தான். கடந்த ... மேலும் பார்க்க