செய்திகள் :

`135 கிலோவில் இருந்து 89 கிலோவாக குறைந்துவிட்டேன்' - அமைச்சர் நிதின் கட்கரி சொல்லும் ரகசியம்!

post image

மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எப்போதும் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிதின் கட்கரி தனது உடல் நலனிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

கொரோனா காலத்திற்கு முன்பு நிதின் கட்கரி 135 கிலோ எடை இருந்தார். ஆனால் இப்போது எடையை குறைத்து மிகவும் ஸ்மார்ட்டாக மாறி இருக்கிறார். எவ்வாறு உடல் எடையை குறைத்தார் என்பது குறித்து பாலிவுட் பட இயக்குனர் பராகானுடன் நிதின் கட்கரி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இயக்குனர் பரா கான் பிரபலமானவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் சமையல் முறையை வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டிற்கு சென்றிருந்தார்.

பரா கானுடன் நிதின் கட்கரி

2.30 மணி நேரம் உடற்பயிற்சி

இந்த சந்திப்பின் போது நிதின் கட்கரி கூறுகையில்,''எனக்கு அதிகாலை 1 மணி வரை சந்திப்புகள் இருக்கும். அப்படி இருந்தும் காலை 7 மணிக்கு எழுந்து இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். முன்னர் நான் 135 கிலோ எடை இருந்தேன். ஆனால் இப்போது 89 கிலோவாக எடையை குறைத்து இருக்கிறேன். கொரோனாவிற்கு பிறகு 46 கிலோ எடையை குறைத்துள்ளேன். கொரோனா காலத்தில் என்னுடன் இருந்த பல உயிரிழந்துவிட்டனர். அதன் பிறகுதான் எனது உடல் நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பல ஆண்டுகளாக வேலையின் காரணமாக எனது உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டுவிட்டேன். எனக்கு மிகவும் திட்டமிடப்படாத, ஒழுங்கற்ற வாழ்க்கை இருந்தது. ஆனால் இப்போது உடற்பயிற்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போது நான் தினமும் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். உடல் ஆரோக்கியமே சிறந்த செல்வம் ஆகும். உடல்நிலை சீர்குலையத் தொடங்கினால், தொழில்முறை வெற்றியோ அல்லது பொது வாழ்வில் உள்ள அந்தஸ்தோ பெரிதாகப் பயனளிக்காது" என்று வலியுறுத்தினார்.

உடல் பயிற்சியில் பிராணாயாமம், உடலை நீட்டும் பயிற்சிகள், தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை பயிற்சியாளர் ஒருவர் துணையோடு செய்வதாக குறிப்பிட்டார். சாப்பாடு விசயத்தில் தினமும் ஒரு முறை மட்டுமே அரிசி சாதம் எடுத்துக்கொள்வதாகவும், அனைத்து விதமான ஆயில் உணவுகளையும் தவிர்த்துவிட்டதாகவும், புரோட்டின் மற்றும் நார்சத்துள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.!

மகாராஷ்டிரா: தங்கையைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி; போராடிக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஷிராலே அருகில் இருக்கும் உப்வாலே என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சங்கராம் பாட்டீல். இவருக்கு சிவம் (11) மற்றும் ஸ்வர்வாஞ்சலி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் ... மேலும் பார்க்க

மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க தனித... மேலும் பார்க்க

குஜராத் : காந்தி நகர் சபர்மதி ஆற்றங்கரையோரம் 6 ஏக்கரில் புதிய நகரை உருவாக்கும் நடிகர் அமிதாப்பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் கடுமையான கடனில் சிக்கித்தவித்தார். ஆனால் இப்போது கடுமையாக உழைத்து கடனில் இருந்து மீண்டு பல்வேறு விதமான தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப்பச்சன் அதிக... மேலும் பார்க்க

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போர... மேலும் பார்க்க

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின... மேலும் பார்க்க

Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான வெனிசுலா அதிபரின் ஆன்மிக தொடர்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவி சிலியா புளோரஸ் தம்பதியை அமெரிக்க படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி சிறைபிடித்துச் சென்றுள்ளன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க