"பாஜக-வின் ஆசியோடு அதிமுக-விடம் திமுக பேசிக்கொண்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்
வெளியானது +2 தேர்வு முடிவுகள்! அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டம் இதுதான் - முழு விவரம்
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கின.
இதையடுத்து மார்ச் 2ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கின. அதன்பிறகு மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்டன.
கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26ஆம் தேதி நடந்த தேர்வில் மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.
இதற்காக 150க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் மே 8ஆம் தேதியான இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் ஈரோடு முதலிடம் பிடித்திருக்கிறது.
அங்கு 98.87 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றன.

வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 97 சதவிகிதமும், மாணவர்கள் 93.19 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6945 பேர் நூற்றுக்கு நூறு எடுத்திருக்கின்றனர்.
கூடுதல் விவரங்கள்
























