செய்திகள் :

வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை வாய்ப்பு!

post image

வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைப்பதற்காக 4.98 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதில் கடந்த 18-2-2023 அன்று முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசின் டிட்கோ (TIDCO) மற்றும் எல்காட் (ELCOT) நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியே, இந்த ஐடி பூங்கா. தற்போது, கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

மினி டைடல் பார்க்

இதையடுத்து, வேலூர் டைடல் பார்க்கை முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ள ஏ.ஜி.எஸ் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு தள ஒதுக்கீட்டு ஆணையையும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, மூத்த அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து, வேலூர் டைடல் பார்க்கில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். வேலூர் டைடல் பார்க் மூலம் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நேரடியாகவும், மேலும் 50 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புப் பெறுகிறார்கள்.

``கே.என்.நேரு கிட்ட, ரூல்ஸ பாலோ பண்ணுங்கனு, படிச்சு படிச்சு சொன்னீங்களா?'' - தவெக அருண்ராஜ் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.இந்நிலையில் இ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்: சிவகாசியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு? ஆட்சியரிடம் ஆவேசப்பட்ட பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, அரசு புறம்போக்கு நிலம் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நத... மேலும் பார்க்க

"தெலுங்கு மக்களுக்கு NTK எதிரியல்ல; 12 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம்" - சொல்கிறார் கார்த்திகைச்செல்வன்

'சாதி பார்த்து விழும் வாக்குகள் எனக்கு தீட்டு' எனப் பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களையே பெரும்பாலும் சாதி பார்த்துதான் தேர்வு செய்... மேலும் பார்க்க

``அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" - CJI கவாய் ஓபன் குற்றச்சாட்டு!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலித் மற்றும் முதல் பௌத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்.இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதுதான், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்து... மேலும் பார்க்க

தென்காசி: "நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க" - ஆட்சியரிடம் 95 வயதான மூதாட்டி புகார்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி.இவர் தனிமையில் வசித்து வருவதால் பொழுதை போக்குகின்ற வகையில் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `பாஸ்கு மைதானம்னு பேரை மாத்திட்டு அன்னதானம் நடத்துங்க' - போராட்டம் நடத்திய மக்கள்

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதி நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும் 10... மேலும் பார்க்க