செய்திகள் :

`ஷாருக் கானுக்கு கிரிக்கெட்டே பிடிக்காது; அவரை கொல்கத்தா அணியின் உரிமையாளராக்கினேன்..!'- லலித் மோடி

post image

இன்றைக்கு இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்கு அதன் முன்னாள் தலைவர் லலித் மோடிதான் முக்கிய காரணம் ஆகும். அவர் தான் பாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து ஐ.பி.எல். அணிகளை விலைக்கு வாங்க வைத்தார். பாலிவுட் நடிகர்கள் ஐ.பி.எல் அணிகளை விலைக்கு வாங்குவதன் மூலம் இந்த கிரிக்கெட் போட்டிகளை மிகவும் பிரபலப்படுத்த முடியும் என்று லலித் மோடி நினைத்தார். இதனால் ஷாருக் கான் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியையும், நடிகை பிரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணியையும், நடிகை ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் அணியையும் விலைக்கு வாங்கினர்.

தற்போது லண்டனில் இருக்கும் லலித் மோடி ஷாருக் கானை எப்படி ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை வாங்க வைத்தார் என்பது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பேட்டியில், ''நான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவராக இருந்தபோது ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றை காண ஷாருக் கானை அழைத்துச் சென்றேன். ஜெய்ப்பூரில் நடந்த முதல் சர்வதேசப் போட்டி இது. இது ஐபிஎல்-க்கு முந்தையது. ஒரு வருடத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன்.

அவர் வந்ததால் கூட்டம் முற்றிலும் வெறித்தனமாக இருப்பதை நான் பார்த்தேன். அவர் போட்டியின் ஹைலைட்டாக ஆனார். கிரிக்கெட்டையும் பாலிவுட்டையும் இணைத்து இந்திய தொலைக்காட்சியுடன் போட்டியிடக்கூடிய ஒரு பிரான்ச்சைஸ் கிரிக்கெட் லீக்கை உருவாக்குவது குறித்து ஏற்கெனவே நான் ஆலோசித்துக் கொண்டிருந்தேன்.

லலித் மோடி
லலித் மோடி

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில் பெரும்பாலானவற்றை கிரிக்கெட் ஆக்கிரமித்து இருந்தது. இந்தியாவில், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் ஆகிய இரண்டு பொருள்கள் விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகிறது. கிரிக்கெட் தொடர்பான விளம்பரதாரர்களில் தொடர்புடைய பணத்தை நான் ஏற்கெனவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

மீதமுள்ள தொலைக்காட்சி விளம்பரங்கள் மாமியார், மருமகள் நிகழ்ச்சிகளுக்கானது. எனவே கிரிக்கெட்டை மட்டும் வைத்து ரசிகர்களை இழுக்க முடியாது என்று நினைத்தேன். எனவேதான் பாலிவுட் பிரபலங்களை ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளின் தலைவர்களாக மாற்ற முடிவு செய்தேன். அதற்கு ஷாருக் கான் சரியான ஆளாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஷாருக் கான் கிரிக்கெட் ரசிகர் கிடையாது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஷாருக் கானுக்கு கிரிக்கெட் பிடிக்காது, கிரிக்கெட்டைப் பற்றியும் அவருக்கு உண்மையில் புரியாது.

அவர் ஒரு கால்பந்து ரசிகர். நான் அவரிடம் ஓர் அணியை வாங்கச் சொன்னபோது, ​​அவர் தயங்கினார். எனக்கு கிரிக்கெட் புரியாது என்றார். நான் அவரிடம் அதை என்னிடம் விட்டுவிடுமாறும், சரியான அணியும் அமைப்பும் அமைக்கப்படுவதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொன்னேன். அடுத்து நான் ஓர் அணியை வாங்க நேர்ந்தால், அதற்கு எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். முன்பணம் ரூ.20 கோடியாக இருக்கும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

ஆனால் அது தனக்கு பெரிய முதலீடு என்று சொன்னார். அந்த நேரத்தில் மொபைல் போன் பிராண்டுகளில் ஒன்றான நோக்கியா, ஷாருக் கானை தங்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய ஆசைப்பட்டது, ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை. அவருடைய ஒப்புதல் வியாபாரத்தில் என்னால் தலையிட முடியவில்லை. அதனால் நான் நோக்கியாவிடம் கேட்டேன், ஷாருக் கான் ஓர் அணியை விலைக்கு வாங்கினால், அந்த அணியின் ஜெர்சியின் முன்பக்கத்தை ஸ்பான்சர் செய்வீர்களா? என்று நோக்கியா நிறுவனத்திடம் கேட்டேன்.

ஷாருக் கான் உங்களின் டீஷர்ட் மற்றும் தொப்பிகளை அணிவார் என்று நான் உத்தரவாதம் அளிக்க முடியும் என்று அவர்களிடம் சொன்னேன். மேலும் அவர்களிடம் $5 மில்லியன் அட்வான்ஸ் கொடுப்பீர்களா என்று கேட்டேன். அவர்கள் ஆம் என்றார்கள். இந்த ஏற்பாடு இரு தரப்பினருக்கும் வெற்றியாக அமைந்தது. மேலும் இது அனைத்தும் ஒரே நாளில் நடந்தது. 12 மணிக்கு, ஷாருக் கான் ஒரு காசோலை எழுதி அணியை விலைக்கு வாங்க கொடுத்தார். மாலைக்குள், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஸ்பான்சர் செய்ய நோக்கியா மற்றொரு காசோலையை எழுதிக் கொடுத்தது'' என்றார்.

மகாராஷ்டிரா: 55 லட்சம் விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி; யார், யாருக்கு எவ்வளவு?

கடந்த 2024ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று கூறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

கல்லூரியில் பூட்டியிருந்த அறையில் கிடந்த 2 சூட்கேஸ்களில் கரையான் அரித்த 1 கோடி ரூபாய் நோட்டுக்கள்!

கொல்கத்தாவின் மத்திய பகுதியில் செயல்படும் சுரேந்திரநாத் கல்லூரியில் பூட்டப்பட்டு இருந்த ஒரு அறையை திறந்து ஊழியர்கள் சுத்தப்படுத்தியபோது, உள்ளே இரண்டு சூட்கேஸ்கள் இருந்தது. அந்த சூட்கேஸ்களை திறந்து பார... மேலும் பார்க்க

இலவச மாம்பழ விருந்து: அமெரிக்கப் பூங்காவைத் திருவிழாக்கோலமாக்கிய அசல் இந்திய மாம்பழங்கள்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பூங்கா ஒன்றில், இந்திய மாம்பழங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு பிரமாண்டமான "இலவச மாம்பழத் திருவிழா" அங்கிருந்த மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்து தற்போது இணையத்தில் பயங்கர வைரலாக... மேலும் பார்க்க

MacBook-க்காக இளைஞர் போட்ட ஸ்கெட்ச்; பணியில் சேர்ந்தவுடன் Uber நிறுவனத்துக்குக் காத்திருந்த ஷாக்!

ஊழியர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் ஒரு லேப்டாப்பிற்காக ஒரு நபர் தனது அடையாளத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த இந்த விசித்திரச் சம்பவம் தற்போது பயங்கர வை... மேலும் பார்க்க

`சுஷ்மிதா என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்தார்; அதுவொரு சிறப்பான உறவு'- மனம் திறந்த லலித் மோடி

நடிகை சுஷ்மிதா சென் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியைக் காதலிப்பதாகச் செய்தி வெளியானது. இருவரும் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்ற புகைப்படங்களை லலித் மோடி தனது சமூக... மேலும் பார்க்க