செய்திகள் :

ஸ்டாலின் வருகையால், தள்ளிப்போன விஜய்யின் வேலூர் விசிட்! - வேகம் காட்டும் தவெக நிர்வாகிகள்

post image

வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்த தேதியில் நிகழ்ச்சியை நடத்த சில சிக்கல்கள் இருந்ததால் வேறு தேதியையும் தவெக-வினர் பரிசீலித்து வந்தனர்.

இதற்காக, வேலூர்-திருப்பத்தூர் மாவட்டங்களின் எல்லைகளைப் பிரிக்கும் அகரம்சேரியில் 25 ஏக்கரிலான பிரமாண்ட வெளிப்புற மைதானம் தேர்வுசெய்யப்பட்டு, அதைச் சீரமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஜய் வருகைக் குறித்தான தேதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

வரும் 14-ம் தேதி சனிக்கிழமை, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் தி.மு.க வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடும் நடைபெற உள்ளது.

அகரம்சேரியில் சீரமைக்கப்படும் விஜய் நிகழ்ச்சிக்கான இடம்

முதலமைச்சர் ஸ்டாலின், அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதனிடையே, முதலமைச்சர் வருகைக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 13-ம் தேதியன்று விஜய்யின் நிகழ்ச்சிக்கு த.வெ.க நிர்வாகிகள் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு, காவல்துறைத் தரப்பில் இருந்து திட்டவட்டமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

எனவே தான், ஸ்டாலின் வந்துசென்ற பிறகு மூன்றாவது வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் அல்லது பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில், வேகம் காட்டுகிறார்கள் த.வெ.க நிர்வாகிகள்.

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points

இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்திய நேரப்படி, நேற்று இரவு, இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அந... மேலும் பார்க்க

'இந்தியா ஒரு காலனி அல்ல'- அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்சனம்

அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. ... மேலும் பார்க்க

திண்டிவனம்: பேருந்து நிலையத்துக்கு வைக்கப்பட்ட கலைஞர் பெயர் நீக்கம் - அதிரடி அரசாணையின் பின்னணி!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த 55 ஆண்டுக்காலமாகச் செயல்பட்டு வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடங்கள் பழுதடைந்த காரணத்தாலும் இடிக்கப்பட்டது. அதையடுத்து தீ... மேலும் பார்க்க

ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!

நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்' தகித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் கையிலெடுத்த `சீன ஊடுருவல்' விவகாரம்தான். ‘Four S... மேலும் பார்க்க

"மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!"- ராகுல் காந்தி விமர்சனம்

மக்களவையில் ராகுல் காந்தி நேற்று (பிப்.2) முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளி வராத `Four Stars Of Destiny' புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்திக்கட்டுரையின் அடிப... மேலும் பார்க்க