செய்திகள் :

100 நாள் வேலைத்திட்டம்: "நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?" - அழைப்பு விடுக்கும் எல்.முருகன்

post image

'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை தந்திருந்த அவர், ஏ.டி.சி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று தலைமை உரை நிகழ்த்தியுள்ளார்.

அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க நிர்வாகியுமான எல்.முருகன் மேடையில் உரை நிகழ்த்தியுள்ளார்.

ஊட்டி பொதுக்கூட்டம்
ஊட்டி பொதுக்கூட்டம்

தொண்டர்கள் மத்தியில் பேசிய எல்.முருகன், "ஊழல் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க-வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இன்னும் இரண்டே மாதங்களில் தி.மு.க வீட்டிற்குப் போகப்போகிறது. ஊழல் என்றாலே தி.மு.க. என்று தான் அர்த்தம்.

2ஜி விவகாரத்தில் காற்றிலும் மெகா ஊழல் செய்தது தி.மு.க. நாட்டின் வளர்ச்சிக்காக நான்கு வழி, ஆறு வழிச் சாலைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மோடி அவர்கள் மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தருகிறார்.

ஆனால், மத்திய அரசின் திட்டங்களின் மீது தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்கள் எனப் பிரதமர் மோடி அவர்கள் உயர்த்தியிருக்கிறார். நேரடியாக அவரவர் கணக்குகளில் பணம் செல்லும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

எல்.முருகன் உரை
எல்.முருகன் உரை

100 நாள் வேலைத்திட்டத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க வரவேண்டும். நான் தயாராக இருக்கிறேன். வெறும் அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தை கையில் எடுத்து மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்" என்றார்.

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க

"ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால்" - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்தி... மேலும் பார்க்க