செய்திகள் :

``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ

post image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (நவம்பர் 7) நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.

“2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார். கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா 15 தொகுதிகளில் ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் தெரியும்.

கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஓபிஎஸ் கூறியதும் எனக்கு பின்னர்தான் தெரியும்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

சிலரின் சதி காரணமாக சீட் உடன்பாடு ஏற்படாததால் 2011 தேர்தலை நாங்கள் புறக்கணிக்க முடிவு எடுத்தோம்.

பிறகு ஜெயலலிதா எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்: “உங்கள் மீது எல்லையற்ற மரியாதை வைத்திருக்கிறேன். கூட்டணி குறித்து முடிவு எடுப்பது உங்களின் சொந்த உரிமை. உங்களை ஒரு சொந்த சகோதரனைப் போலவே பாவித்து வருகிறேன். இந்த சகோதரி என்றும் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறாள்” என்று ஒரு அருமையான கடிதத்தை எழுதியிருந்தார்,” என்று கூறியிருக்கிறார்.

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க

``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது" - செங்கோட்டையன் ஓப்பன் டாக்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று( நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.``பழனிசாமியின் குடும்பத்தினரே கட்சியை நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜகவுடனான கூட்டணி... மேலும் பார்க்க

கொடநாடு கொலை நடந்தது ஏன்? - TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show

* இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா* வாக்குத் திருட்டு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? * "ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும்... மேலும் பார்க்க

``நடிகர் விஜய் பலவீனமானவர், பிரச்னை வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்'' - சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசின் அனுமதி பெறாமல் ஒரு செங்கலைக்கூட மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு எடுத்து வைக்க முடியாது. ... மேலும் பார்க்க

ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?

சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன.தென் கொரிய... மேலும் பார்க்க