செய்திகள் :

``234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

post image

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பிரேமலதா விஜயகாந்த்

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ள அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். குன்னூர் அருகில் உள்ள கோடமலை படுகர் சமுதாய மக்களின் கிராமத்திற்கு சென்ற அவர் அவர்களுடன் சேர்ந்து படுகர் நடமாடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், " வரவிருக்கும் ஜனவரி 9 - ம் தேதி கடலூரில் தே.மு.தி.க - வின் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O என்ற பெயரில் நடத்தப்படும் அந்த மாநாட்டில் எங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்படும்.‌

பிரேமலதா விஜயகாந்த்

234 தொகுதிகளிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது. 2026 தேர்தல் மட்டுமின்றி அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும். வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் இந்த இயக்கம் கிடையாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணியை வலுவாக அமைப்போம் " என்றார்.

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க மு... மேலும் பார்க்க

இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை' கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள கிள்ளியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கான பாதை கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இறந்தவர்களின் உடலை ச... மேலும் பார்க்க

TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? - பரபர பின்னணி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம்.விஜய்விஜய... மேலும் பார்க்க

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டு... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூடு : `அதிகாரிக்கு பதவி உயர்வா? திமுகவின் இரட்டை வேடம்’ - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

``தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை. குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருந்ததை ரத்து செய்து விட்டு தூத்துக்குடி செல்கிறேன்.” - கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்க... மேலும் பார்க்க