செய்திகள் :

Anbe Diana: ``நான் இந்த இடத்திற்கு வரக் காரணமாய் இருந்த தனுஷ் சாருக்கு நன்றி" - ரம்யா ரங்கநாதன்

post image

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது.

அன்பே டயானா பாரி இளவழகன் - யுவராஜ்
அன்பே டயானா பாரி இளவழகன் - யுவராஜ்

இந்த நிகழ்வில் பேசிய நடிகை ரம்யா ரங்கநாதன், ``முதலில் என் திறமையைக் கண்டறிந்து, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் வாய்ப்பளித்து, இந்த இடத்திற்கு வரக் காரணமாய் இருந்த தனுஷ் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தச் சிறப்பான கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் பாரிக்கு பெரிய நன்றி. ‘ஜமா’ திரைப்படத்தில் உங்களின் நடிப்பைப் பார்த்து வியந்த எனக்கு, அதற்கு நேர்மாறான ‘அன்பே டயானா’ கதையை நீங்கள் கையாண்ட விதம் உங்களின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. நீங்கள் வாழ்வில் மிகப்பெரிய உயரங்களை அடைவீர்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெலி சார் எங்களை திரையில் மிக அழகாகக் காட்டியுள்ளார். இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் ‘தொடுவானத்தில்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ரோஜா மேமின் சிரிப்புக்கும் நடனத்திற்கும் நான் எப்போதுமே பெரிய ரசிகை.

வெளியில் பார்க்க ஸ்ட்ரிக்ட் ஆகத் தெரிந்தாலும், அவர் உள்ளுக்குள் மிகவும் அன்பானவர். சேத்தன் சாருடன் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறேன், அவரோடு நடித்தது ஜாலியாக இருந்தது.

அன்பே டயானா படக்குழு
அன்பே டயானா படக்குழு

‘பரிதாபங்கள்’ கோபி அண்ணாவின் மிகப்பெரிய ரசிகை நான், அவருடன் நடிக்கும் போது சிரிப்பை அடக்கிக்கொண்டு நடிப்பதுதான் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. சுதர்சன் அண்ணா மற்றும் என் ஆங்கிலோ இந்தியக் குடும்பமாக நடித்த நிகிலா, இஸ்மத், அதிதி என அனைவரோடும் நடித்தது ஒரு சிறந்த அனுபவம்.

ஒரே கதாபாத்திரத்தில் கோபம், நகைச்சுவை, காதல் எனப் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதற்காக என் 100% உழைப்பைக் கொடுத்துள்ளேன், உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.

நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், இதற்கு முன்பு பெரம்பூர் பக்கம் போனதே இல்லை. இந்தப் படத்தின் மூலம் ஐ.சி.எஃப் (ICF) காலனி உள்ளிட்ட அந்தப் பகுதிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரம்பூர் மக்கள் மற்றும் அங்கு வாழும் ஆங்கிலோ இந்தியன் மக்கள் அனைவரும் மிகவும் அன்பானவர்கள், முற்போக்கானவர்கள் மற்றும் உதவும் குணம் கொண்டவர்கள்.

'அன்பே டயானா' என்பது அனைவரும் இரண்டு மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து தங்களின் கவலைகளை மறந்து ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான குடும்பத் திரைப்படமாக இருக்கும். நன்றி!'' என்றார்.

Janaki: ``என் மெட்டுக்கு மெருகேற்றியவர்; பாட்டுக்கு அமுதூட்டியவர்" - டி.ராஜேந்தர் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர் பாடகி ஜானகி. இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்... மேலும் பார்க்க

Janaki: 55 வருடங்களுக்குப் பிறகு பத்ம பூஷனா? விருதை வாங்க மறுத்த ஜானகி; வைரலாகும் வீடியோ

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பின்னணிப் பாடகி ஜானகி நேற்று (ஜுலை.11) காலமானார். இவர் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

ஜானகி மறைவு: "சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களைத் தாங்கியிருக்கிறார்..." - இளையராஜா இரங்கல்

பின்னணி பாடகி ஜானகியின் மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் இளையராஜா ஜானகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியி... மேலும் பார்க்க

"ஒரு தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள்" - மகள்கள் மீதான உருவக்கேலிக்கு குஷ்பு பதிலடி

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் மகள்கள் உருவக்கேலியைச் சந்தித்து வந்த நிலையில் குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க

Anbe Diana:``'பெரம்பூர்' சுற்றுலாத் தலம் போல மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது" - நடிகர் சமுத்திரகனி

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

"கேலி செய்வது கோழைத்தனம்" - குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா கண்டனம்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகியோரின் இரண்டாவது மகள் அனந்திதா. இயக்குநர் மணிரத்னத்திடம் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப... மேலும் பார்க்க