பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காத...
BB Tamil 9: "28 நாள் பேசாத துஷார் இன்னைக்கு ஏன் பேசுறாரு"- திவ்யா கணேஷ் காட்டம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருக்கின்றனர்.
இன்று வெளியான முதல் புரொமோவில், " உங்க ஆட்கள் எல்லாரும் குழப்பத்தில இருக்காங்க. அவங்களை எங்களுக்கு சர்வீஸ் பண்ண சொல்லுங்க" என மஞ்சரியும், தீபக்கும் சொல்ல திவ்யா கணேஷ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் கூப்பிட்டு "எல்லாரும் 5 மினிட்ஸ்-ல யூனிபார்ம் மாட்டிகிட்டு ரெடியா இருக்க வேண்டும்" என சொன்னார்.

இதனைத்தொடர்ந்து திவ்யாவிற்கும், துஷாருக்கும் வாக்குவாதம் நடந்தது. "மேனேஜர் நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க. மத்தவங்க அமைதியா இருக்காங்கன்னு என்னால அமைதியா இருக்க முடியாது" என துஷார், திவ்யாவிடம் கத்த இத்தனை நாள் எப்படி இருந்தீங்க? என அவரை கேள்வி கேட்டார்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில், " மேனேஜர் பண்ணுகிற விஷயங்கள் எனக்கு புடிக்கல" என துஷார் கனியிடம் சொல்கிறார். கனி திவ்யாவிடம் இதனை கேட்க, " கெஸ்ட் என்னை கேள்வி கேட்கிறாங்க.

அவங்க கிட்ட சொல்றதுக்கு என் கிட்ட எந்த பதிலும் அப்போ இல்ல. 28 நாளா பேசாத துஷார் இன்னைக்கு ஏன் பேசுறாரு. ஹோட்டலை ரன் பண்ணுங்க. இல்ல ரன் பண்ணாம போங்க" என திவ்யா கோபப்படுகிறார்.



















