செய்திகள் :

Brazil: கவனக்குறைவால் Bungee Jumping விபத்தில் சிக்கிய மாணவி; காப்பாற்ற செவிலியர் நடத்திய போராட்டம்

post image

ஒரு நொடி சாகசம், அடுத்த நொடி மரணம் எனப் பிரேசிலின் பாலத்தில் அரங்கேறிய விபரீதம் ஒட்டுமொத்த உலகையும் உறைய வைத்திருக்கிறது. சா பாலோ மாகாணத்தில் உள்ள லிமேரா நகருக்கு அருகில், "எலும்புக்கூடு பாலம்" என்ற ஆபத்தான இடத்தில் வார இறுதியைக் கொண்டாட வந்த மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற 21 வயது மாணவிக்கு, அதுவே அவரது கடைசிப் பயணமாக மாறியுள்ளது.

பங்கி ஜம்பிங் விளையாடத் தயாரான அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு கயிறு ஏதும் மாட்டாமல், அங்குள்ள ஊழியர்கள் 130 அடி உயரத்திலிருந்து அப்படியே கீழே தள்ளிவிட்ட அதிரவைக்கும் அலட்சியம் நெஞ்சை உலுக்கும் கொடூரமாக அரங்கேறியுள்ளது.

இந்த விபத்து நிகழ்ந்த உடனே, அந்தப் பகுதியில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த ராய்சா டயஸ் என்ற செவிலியர், சேறும் சகதியுமாக இருந்த செங்குத்தான மலைப்பாதை என எதையும் பொருட்படுத்தாமல், அவரைக் காப்பாற்றுவதற்காக ஒரு கயிற்றின் உதவியோடு கீழே இறங்கிச் சென்றுள்ளார்.

நூற்று முப்பது அடி உயரத்திலிருந்து மிகக் கொடூரமாகக் கீழே விழுந்த பிறகும், அந்த மாணவி சில நிமிடங்கள் உயிருடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மரியாவிடம் பேசிய செவிலியர், "என் ஷிஃப்ட்டில் யாரும் இறக்க மாட்டார்கள், நீ பிழைத்துவிடுவாய்" என்று தைரியம் கூறி முதலுதவி வழங்கி அவரைக் காப்பாற்றத் தீவிரமாகப் போராடியுள்ளார்.

எனினும், ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அவசர மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, கடுமையான உள் காயங்கள் காரணமாக அந்த மாணவியின் உயிர் பிரிந்தது.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பியோட முயன்ற இருவர் உட்பட மூன்று ஊழியர்களை பிரேசில் நாட்டுப் போலீசார் தற்பொழுது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளனர். அரசு உரிமமும், முறையான பாதுகாப்பு நெறிமுறைகளும் இல்லாமல் நடத்தப்பட்ட இந்தச் சாகசப் பயணம், ஒரு இளம் மாணவியின் உயிரைப் பறித்ததோடு சர்வதேச அளவில் சாகச விளையாட்டுகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா: சாலையோரக் கிணற்றில் விழுந்த வேன்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி; பிரதமர் இரங்கல்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூரைச் சேர்ந்த 15 பேர் கோயில் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வேன் ஒன்றில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வேன் தந்துல்வாடி என்ற கிராமத்தில் வந்த... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: விமானப்படை விமானம் விழுந்து 5 வீரர்கள் பலி; முதல்வர் ஹிமந்தா சொல்வது என்ன?

அஸ்ஸாமில் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத்தளத்தில் இன்று விமானப்படை விமானம் AN-32தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த... மேலும் பார்க்க

மன்னார்குடி: `அப்பா வந்திருக்கேன் எழுந்திரி ராசா'- கார் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி; கதறும் பெற்றோர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை அரசுப் பள்ளியில் லோகேஷ், ரச்சித் ஆகிய இருவர் சிறுவர்கள் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி என்ற சிறுவன் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை வழக்க... மேலும் பார்க்க

குன்னூர்: மலைப்பாதையில் கவிழ்ந்த ஆந்திர சுற்றுலா வாகனம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூ... மேலும் பார்க்க

கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்

உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பி... மேலும் பார்க்க

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து - ஏர்வாடி அருகே சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்தவர் லாடசாமி. இவருடைய மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நேற்றைய தினம் ஏர்... மேலும் பார்க்க