செய்திகள் :

Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக் கூடாது என்று சொல்லப்படுவது உண்மையா?!

post image

Doctor Vikatan: யாருக்காவது சளி பிடித்திருந்தால் பால் குடிக்கக் கூடாது என்று சொல்வதைக் கேட்கிறோம். பால் குடித்தால் சளித் தொந்தரவு அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

அறிவியல் ஆய்வுகளின்படி, பால் குடிப்பதற்கும் உடலில் சளி (Mucus) அதிகமாக உருவாவதற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. பால் குடிப்பதால் புதிதாக சளி உருவாவதோ அல்லது இருக்கும் சளி அதிகரிப்பதோ கிடையாது. 

ஆனாலும், காலங்காலமாக இப்படி ஒரு தவறான கருத்து மக்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  பாலில் உள்ள கொழுப்புச்சத்து நமது எச்சிலைச் சற்று தடிமனாக்கலாம், இதனால் சளி அதிகமாக இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுமே தவிர, பால் நேரடியாக சளியை உண்டாக்குவதில்லை. பால் குடிக்கும்போது அதன் வெப்பநிலை மிக முக்கியம். குளிர்ச்சியான பாலைக் குடிக்கும்போது, அந்தக் குளிர்ச்சியால் சளி பிடிக்க வாய்ப்புள்ளது.  மிதமான சூட்டில் பால் குடிப்பது தொண்டைக்கு இதத்தைத் தரும். அதே போல கடைகளில் கிடைக்கும் ஃப்ளேவர்டு மில்க்கில் (flavoured milk) சேர்க்கப்படும் சில பொருள்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதுவும் சளி போன்ற உணர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

தங்கப்பால் (Golden Milk) என்ற பெயரில் இது வெளிநாடுகளில் கூட பிரபலமாக இருக்கிறது.

சிலருக்கு பால் அலர்ஜி  இருக்கலாம். அவர்களுக்கு பால் உள்ளிட்ட பால் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார். அந்த ஒவ்வாமை இருப்பது தெரியாமல் பால் குடிப்பவர்களுக்கு  மூச்சு விடுவதில் சிரமம் அல்லது சளி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பாலில் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்துப் பருகும் பழக்கம் உள்ளது. இது பாலில் உள்ள கொழுப்பை உடல் நன்றாக உறிஞ்சுவதற்கு உதவுவதுடன், தொண்டை வலிக்கும் மருந்தாக அமைகிறது. தங்கப்பால் (Golden Milk) என்ற பெயரில் இது வெளிநாடுகளில்கூட பிரபலமாக இருக்கிறது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

`கொலஸ்ட்ரால்-ன் அவசியமும் ஆபத்தும்... அதிமருந்தாகும் பூண்டு!' - விளக்கும் மருத்துவர்

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் நேரம் இல்லாத காரணத்தால், சீக்கிர உணவு (fast food) மற்றும் எண்ணெய், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உண்ண ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பழக்கங்கள் உடலில் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: நகம் கடிக்கும் பழக்கத்தால் வயிற்றில் பூச்சிகள் உருவாகுமா?!

Doctor Vikatan: என்குழந்தைக்கு நகம் கடிக்கிறபழக்கம் இருக்கிறது. எவ்வளவோ சொல்லியும் அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. அவனுக்குஅடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. நகம் கடிக்கும் பழக்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சைகள்... கூந்தலை வளர்க்குமா, பாதிக்குமா?

Doctor Vikatan: முடி வளர்ச்சி குறைவாக உள்ள பலரும் இன்று ஹேர் எக்ஸ்டென்ஷன் எனப்படும் சிகிச்சையைச் செய்துகொள்வதைப் பார்க்கிறோம். அந்தச் சிகிச்சையைச் செய்துகொண்டால், முடி வளர்ச்சி அதிகரிக்குமா.... ஹேர் எ... மேலும் பார்க்க

பழைய சோறு கஞ்சியில் இத்தனை நன்மைகளா? - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆய்வும் மருத்துவர் விளக்கமும்!

வடித்த சாதம் வீணாவதைத் தடுக்க நம் முன்னோர்கள் மீதி இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கஞ்சி போல குடிக்கும் பாரம்பரியப் பழக்கத்தை வைத்திருந்தனர்.தமிழர்களின் பார... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரசவ தேதியைத் தாண்டியும் குழந்தை பிறக்காவிட்டால் காத்திருக்கலாமா?

Doctor Vikatan: கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பிரசவ தேதியைக் குறித்துக்கொடுக்கிறார்கள். சில பெண்களுக்கு அந்தத் தேதியில் பிரசவம் நடப்பதில்லை. அதைத் தாண்டிப் போவதும் நடக்கிறது. மருத்துவர்கள் குறித்துக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சராசரிக்கு முன்பே பூப்படைவது, வயதைத் தாண்டியும் தள்ளிப்போவது; இயற்கை தீர்வு உண்டா?

Doctor Vikatan: இந்தக் காலத்துப் பெண் குழந்தைகளில்சிலர் சராசரி வயதுக்கு முன்பே பூப்படைகிறார்கள். இன்னும் சிலரோ, சராசரி வயதைக் கடந்தும் பூப்பெய்தாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆங்கிலமருந்துகள், ஹார்ம... மேலும் பார்க்க