செய்திகள் :

Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

post image

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்பு மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

Ind vs pak
Ind vs pak

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என நினைத்தால், ஒன் சைடு ஆட்டமாக இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது இந்தப் போட்டி.

இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்க்கு பதிலாக குல்தீப் யாதவ்வும் களமிறங்கினர்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்ததால், தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

அபிஷேக்
அபிஷேக்

பின்னர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, போட்டியின் போக்கை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சில விக்கெட்களை இழந்தாலும், இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை ரன்களை சேர்த்தது.

பாகிஸ்தான் அணிக்கு டார்கெட் 176.

இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே சரவெடியாக தாக்கினர். முதல் 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய அணி, போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தியது. பொறுப்புடன் விளையாடி வந்த பாகிஸ்தான் வீரர் உஸ்மானும் 44 ரன்களில் ஆட்டமிழக்க அந்த தருணத்திலேயே, பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது.

இந்தியா
இந்தியா

அடுத்தடுத்து இந்தியாவின் வேகத்திலும் சுழலிலும் சிக்கி, பாகிஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர், வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

77 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

T20 WC: ஆஸ்திரேலியா ஆல் அவுட்; சம்பவம் செய்த ஜிம்பாப்வே! - கொழும்புவில் என்ன நடந்தது?

கொழும்புவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது ஜிம்பாப்வே அணி.Zimbabweடாஸை ஆஸ்திரேலிய அணியே வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. கொழும்பு மைதானம் கொஞ்... மேலும் பார்க்க

'தீப்பொறியாக நமீபியா; ஊதி அணைத்த மென் இன் ப்ளூ! - எப்படி வென்றது இந்தியா?

உலகக்கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு பெரும்பாலும் சிக்கல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் சின்னச்சின்ன அணிகளெல்லாம் சிறப்பாக ஆடுகின்றன. அதனால் நமீபியாவுக்கு எ... மேலும் பார்க்க

T20 WC: `என்னா மேட்ச்!' - இரண்டு சூப்பர் ஓவர்; ஆனாலும் லாஸ்ட் பால் த்ரில்லர்! SA-வை பதற வைத்த AFG!

டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது.தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப்... மேலும் பார்க்க

CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் - இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!

ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்... மேலும் பார்க்க

Shubman: 'அவரின் எளிமையைக் கண்டு வியந்தேன்'- சுப்மன் கில்லை பாராட்டிய இங்கிலாந்து கால்பந்து வீரர்

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில... மேலும் பார்க்க

'சூர்யாக்கிட்ட இருந்து போன் வந்த உடனே ஜோக்குனு நினைச்சேன்!' - கடைசி நிமிட வாய்ப்பு குறித்து சிராஜ்!

உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டி20 உலகக்... மேலும் பார்க்க