செய்திகள் :

IPL : விற்பனைக்கு வரும் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.16,000 கோடியை நிராகரித்த RR!

post image

ஐ.பி.எல் அணிகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நிதி நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்க முன்வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சி.பி.சி.பி என்ற நிறுவனம் 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க சுமார் ₹16,000 கோடி கோடி தருவதாக தெரிவித்தது. ஆனால் அந்த தொகையை அணி நிர்வாகம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுவும் ரூ.16 ஆயிரம் கோடியை வெறும் இரண்டு வாரங்களுக்குள் செலுத்துவதாக அவர்கள் உறுதியளித்திருந்தனர். ஆனால் அணியின் மதிப்பீட்டு தொகையை இன்னும் அதிகப்படுத்த நிர்வாகம் விரும்புவதாகவும், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதும் அணியை விற்பனை செய்ய முடியாமல் போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த மெகா தொகையை நிராகரித்திருப்பது, ஐபிஎல் அணிகளின் சந்தை மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, விற்பனைப் பேச்சுவார்த்தையில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மதிப்பு $2 பில்லியனைத்(ரூ.18,000 கோடி)தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பை விட 15 சதவீதம் அதிகமாகும். ஆர்.சி.பி. அணியின் பலமான பிராண்ட் மதிப்பு, மிகப்பெரிய ரசிகர் கூட்டம் மற்றும் வர்த்தக ரீதியான ஈர்ப்பு ஆகியவற்றை கொண்டிருப்பதால் அதன் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

தற்போது ஆர்.சி.பி அணியின் உரிமையாளராக இருக்கும் டயஜியோ நிறுவனம் வரும் மார்ச் மாதத்திற்குள் அணியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐ.பி.எல் பட்டத்தை வென்று இருப்பதன் மூலம் ஆர்.சி.பி அணியின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. மணிப்பால் மருத்துவமனையின் டாக்டர் ரஞ்சய் பை தலைமையிலான குழு, அமெரிக்காவின் கே.கே.ஆர். மற்றும் சிங்கப்பூரின் டெமஸ்கே ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆர்.சி.பி பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க ஆதித்ய பிர்லா குழுமம் மற்றுல் ஆர்செலர் மிட்டல் போன்ற முன்னணி நிறுவனங்களும் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் திருவிழா வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டி... மேலும் பார்க்க

CSK: இம்பேக்ட் பிளேயராக தோனி? - சிஎஸ்கேவின் 'ஃபினிஷர்' ரோலில் களமிறங்கும் 20 வயது இளம்வீரர் யார்?

ஐபிஎல் 2026 திருவிழா மார்ச் 28-ல் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் மத்தியில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மார்ச் 30-ம் தேதி ராஜஸ... மேலும் பார்க்க

`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அணியின் மவுசு கூடியிருக்கிறது. தற்போது இந்த அணியின் மதிப்பு சுமார் ₹18,000 கோடி வரை உயர்ந்துள்ளது. ... மேலும் பார்க்க

Dhoni: "ரோஹித், கோலி, ஏன் என்னையும் உருவாக்கியவர் அவர்தான்.!"- தோனியை புகழந்த ரெய்னா

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக்கூடியவர் தான் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழ்ந்திருக்கிறார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப... மேலும் பார்க்க

"பாக். வீரர் ஒப்பந்தம்; பற்றி எரியும் சர்ச்சை - காவ்யா மாறனை சீண்டிய லலித் மோடி! - பின்னனி என்ன?

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட 'தி ஹண்ட்ரட் ல... மேலும் பார்க்க

``கம்பீர் நினைத்தால், நானும், விராட், ரோஹித்தும் விலகுவது தப்பில்லை" - அஷ்வின் ஓப்பன் டாக்

கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவித்த ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனில் கும்ப்ளேவின் (619 வி... மேலும் பார்க்க