UPSC / TNPSC: தூத்துக்குடியில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்
Mammootty: " `லோகா' படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மம்மூட்டி கலகல
18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தின் ரிலீஸையொட்டி 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்தின் இந்திய பதிப்பிற்குப் பேட்டியளித்திருக்கிறார் மம்மூட்டி.
இதில், 'லோகோ' திரைப்படத்தின் அவருடைய மூத்தோன் கதாபாத்திரம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
மம்மூட்டி, " முதலில் துல்கர் சல்மான் என்னிடம் 'லோகா' திரைப்படம் பற்றியே பேசவில்லை. அவருடைய மேலாளர் ஒரு சின்ன வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்காக என்னைக் கூப்பிட்டார்.
அது மட்டும்தான், 'லோகா' முதல் பாகத்தில் செய்தேன். சொல்லப்போனால், மூத்தோன் கதாபாத்திரத்தின் காட்சியில் வரும் கைகூட என்னுடையது கிடையாது. திரைப்படம் வெளிவந்த பிறகுதான், அது நீங்கள், உங்களுடைய கை என்றார்கள்.

இப்போது அந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்கிற பொறுப்பும் வந்துவிட்டது. சொல்லப்போனால், என்னை ஏமாற்றிவிட்டார்கள் (சிரித்தபடியே...).
'லோகா'வில் நடிப்பதற்கு அவர்கள் என்னைச் சம்மதிக்க வைத்தாலும், நான் என்னுடைய சம்பளத்தைச் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைக்க வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.



















