செய்திகள் :

OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி

post image

தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் தொடர் மவுனம் சாதித்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். தை பிறந்ததும் கூட்டணியை அறிவிப்பேன், நாங்கள் அரசியல் கட்சி அல்ல என்று ஒவ்வொரு நேரத்திலும் வெவ்வேறு பதில்களை கூறி அரசியல் களத்தை குழப்பி வந்தார்.

இந்த நிலையில், இன்று தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகமாக நாங்கள் உருவாக்கி, சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை

எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதனை நிரூபித்து காண்பிப்பதற்காக, ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முக்கிய காரணம். என்னுடன் கட்சியும், தொண்டர்களும், மக்களும் இல்லை என்ற சூழலை கட்டமைக்க செய்த சூழ்ச்சிகள் அவை. இன்றுவரை எங்களுடைய நோக்கம் சட்ட போராட்டம் நடத்தி தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டு தருவதுதான். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்ற எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முதல்வராக அரியணை ஏற்றியது தேனி மாவட்டம். எனவே, இந்த மாவட்டத்தை சார்ந்தவன் என்ற முறையில், கழகத்தினுடைய சட்டவிதிக்கு ஊறு ஏற்பட்டிருக்கிறது என்பதால், 88 கழக ரீதியான மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றோம். அ.தி.மு.க பிரிந்திருக்கிறதா சேர்ந்திருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.

டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி
டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி

நான் என்.டி.ஏ கூட்டணியில் இணைவேன் என்பது டிடிவி தினகரனின் ஆசை அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் பேச ஒன்றுமில்லை. இன்று டிடிவி தினகரனும், எடப்பாடியும் பங்காளிகளாக இணைந்திருக்கிறார்களே, நாங்கள் ஏற்கெனவே இணைய வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியானு கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்.

``4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார்; வாய்ப்பில்லை" - ஓபிஎஸ்-க்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி!

தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்... மேலும் பார்க்க

பாராமதி: `நாளை பேசுகிறேன் அப்பா' - விமானப் பணிப்பெண் பிங்கி மாலி பேசிய கடைசி வார்த்தைகள்

பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகே நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, தனது தந்... மேலும் பார்க்க

கண்ணீர்மல்க அஜித் பவாருக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி, மகன்கள் - அமிஷ் ஷா, தலைவர்கள் நேரில் இரங்கல்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த விமான விபத்தில் அகாலமரணம் அடைந்தார். அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து மேலும் 5 பேர் உயிரிழந்தனர். அஜ... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026

2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது. இந்த ஆண்டின் வருமான வரி சம்பந்தமாக என்னென்ன அறிவ... மேலும் பார்க்க

அஜித் பவார்: மது, புகையிலைக்கு `நோ' ; ஒழுக்கம், கண்கண்ணாடியில் அதிக ஆர்வம்; சுத்தம் மிக முக்கியம்!

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அஜித் பவ... மேலும் பார்க்க

'டீல்' பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்

நிறைவு விழாவில் பிரதமர்!'டீல்' பேசும் வேலுமணிஅ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். ... மேலும் பார்க்க