செய்திகள் :

Orangutans: ஒடிசாவில் கைவிடப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்; கடத்தல் கும்பல்களின் கொடூரப் பின்னணி

post image

இரக்கமற்ற கடத்தல் சம்பவங்களில் ஒடிசாவைச் சேர்ந்த வனவிலங்கு கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. யானை தந்தங்கள், எறும்பு தின்னிகளின் செதில்கள் புலி, சிறுத்தை தோல்கள், அரிய வகை ஆமைகள் மற்றும் ஒடிசாவின் அரிய வனவிலங்குகளை கடல் மார்க்கமாக வங்கதேசம் மற்றும் மியான்மர் வழியாக சீனாவுக்குக் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

கிழக்கு இந்தியாவில் வனவிலங்குக் கடத்தலுக்கான ஒரு முக்கிய போக்குவரத்து மையமாகவும் கடத்தல் வழித்தடமாகவும் ஒடிசா உருவெடுத்து வருவதை தரவுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒராங்குட்டான் குட்டிகள்
ஒராங்குட்டான் குட்டிகள்

அதேவேளையில் இந்திய வனவிலங்குகளை வெளிநாடுகளுக்கு கடத்துவது மட்டுமின்றி, இந்தோனேசியா, மலேசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து ஒராங்குட்டான்கள், கிப்பன்கள் போன்ற அரிய விலங்குகளை இந்திய பணக்காரர்களின் வீடுகளில் வளர்ப்பதற்காக இந்தியாவுக்குள்ளும் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சுமார் 50 லட்சம் ரூபாய் வரை சட்டவிரோத கருப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒராங்குட்டான் மற்றும் கிப்பன் குட்டிகளுக்காக அவற்றின் தாயைக் கொடூரமாகக் சுட்டுக் கொன்று குட்டிகளைத் தானியாகப் பிரித்துக் கொண்டு வரப்படுகின்றன.

இந்த நிலையில்தான், இந்தோனேசியா, மலேசியா, போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளின் வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டுமே இயற்கையாக வாழக்கூடிய ஒராங்குட்டான்களின் 5 குட்டிகளைக் கடத்தி வந்த ஒடிசா கடத்தல் கும்பல், ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்ட வனப்பகுதியில் அந்த 5 குட்டிகளையும் யாருக்கும் தெரியாமல் விட்டுச் சென்றுள்ளனர்.

உள்ளுர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அந்த 5 ஒராங்குட்டான் குட்டிகளையும் மீட்டுள்ளனர். பிறந்து சில மாதங்களே ஆன 1 முதல் 1.5 அடி உயரமுள்ள‌ 3 ஆண், 2 பெண் குட்டிகளையும் மீட்டு பராமரித்து வருகின்றனர். ஒன்றிரண்டு குட்டிகளின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஒடிசா வனத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட ஒராங்குட்டான் குட்டிகள்
மீட்கப்பட்ட ஒராங்குட்டான் குட்டிகள்

பின்னணி குறித்து தெரிவித்துள்ள ஒடிசா வனத்துறை அதிகாரிகள், "சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் ஆய்வுகளின் மிகவும் ஆபத்தான நிலையில் அழிந்து வரும் இனமாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடத்தல்காரர்கள் இவற்றை இந்தோனேசியாவிலிருந்து கடத்தி வந்துள்ளனர்.‌‌ கடத்தல் முயற்சி தோல்வியடைந்ததால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கடத்தல்காரர்கள் இவற்றைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, இந்த 5 குட்டிகளும் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளன. இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக‌ மத்திய அரசின் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து ஒடிசா வனத்துறை உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Nepal Flood: நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது?

கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.இந்த வெள்ளம் மனிதர்களின் உயிர்களை மட்டுமே குறி வைக்கவில்லை. வாக... மேலும் பார்க்க

Man Eater: 130 கண்காணிப்பு கேமிராக்கள், 13 கூண்டுகள்; 11-வது நாளாகப் போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி

மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் 2 நபர்களை புலி தாக்கி கொன்றதுடன் அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுள்ளது. மனிதர்களை வேட்டையாடி பழகிய அந்தப் புலிய... மேலும் பார்க்க

"அவ்வளவு பெரிய பனியும் பாறைகளும் கீழே விழுந்ததால்தான் அந்த அதிர்வுகள்.!" - நேபாள வெள்ளம் விளக்கம்

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26), நேபாளத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இப்போது வரை வெளியாகி உள்ள தகவலின்படி, இந்த வெள்ளத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்புக் குழு தேடி வ... மேலும் பார்க்க

காக்க வந்த கரைகள்... கழுத்தை நெரித்த கதை: `கோசி திட்டம்' ஒரு வரலாற்றுப் பிழையா?

இயற்கையின் மாபெரும் சக்திகளில் ஒன்றான ஆறுகள், சில சமயங்களில் தங்களின் வழக்கமான பாதையை விட்டு விலகி, திடீரென ஒரு புதிய வழியில் பயணிக்கத் தொடங்கும். புவியியலில் இந்த நிகழ்வு 'அவல்ஷன்' (Avulsion) என்று அ... மேலும் பார்க்க

மருதமலை: பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வரும் குட்டை – நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள குட்டை ஒன்று தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. குட்டையின் நீர்ப்பரப்பில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுக... மேலும் பார்க்க