செய்திகள் :

PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to

post image

நேற்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

அந்தப் புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட நான்கு கையெழுத்துகளில் ஒன்று - PM RAHAT (Road Accident Victims Hospitalisation and Assured Treatment) திட்டம்.

PM RAHAT எதற்கு?

இந்த மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கீழ் வரும் திட்டம் ஆகும்.

விபத்து
விபத்து

யாருக்கு?

இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவருமே பயன்பெறலாம். பாதிக்கப்பட்டவருக்கு நிதிப் பின்னணி என்னவாக இருந்தாலும், அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவது எப்படி?

> விபத்து நடந்த 24 மணிநேரத்திற்குள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY நெட்வொர்க்கின் கீழ் இருக்கும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

> எந்த மருத்துவமனை இந்த நெட்வொர்க்கின் கீழ் வரும் என்பதை தெரிந்துகொள்ள 112 என்கிற தொலைபேசி எண்ணுக்குப் போன்கால் செய்யலாம்.

> விபத்து குறித்து முதல் 24 மணிநேரத்தில் போலீஸாரிடம் புகாரளித்திருக்க வேண்டும்.

> பெரும்பாலும், அனுமதிக்கப்படும் மருத்துவமனையே போலீஸாரிடம் இந்த மாதிரியான விபத்துகளைத் தெரிவித்துவிடும்.

> மருத்துவமனை நிர்வாகமே குறிப்பிட்ட விபத்தை மத்திய போக்குவரத்துத் துறையில் e-DAR ( Electronic Detailed Accident Report)-ல் பதிவு செய்துவிடும்.

மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை பெற பாதிக்கப்பட்டவர் என்ன ஆவணங்கள் தர வேண்டும்?

> அடையாள அட்டை

> எஃப்.ஐ.ஆர்

> காயம் சம்பந்தமான ஆவணங்கள்

விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தமிழச்சி தங்கபாண்டியன்

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய தவெக தலைவர் விஜய், ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது ... மேலும் பார்க்க

"அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?"- விஜய்க்கு அதிமுக பதிலடி

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. ``கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு... மேலும் பார்க்க

இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained

இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி... ஆசிய நாடுகளிலேயே யார் டாப் இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி பல தசாப்தங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறன. இதன் விளைவு தான் அடிக்கடி இந்தியா... மேலும் பார்க்க