செய்திகள் :

RCB: "ஹாட்ரிக் கப் அடிக்கிறதுக்கு ஐடியா பண்ணப் போறோம்!" - உற்சாகத்தில் ரஜத் பட்டிதார்

post image

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பத்திரிகையாளர் சந்திப்பில் மகிழ்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார்.

RCB
RCB

ரஜத் பட்டிதார் பேசியதாவது, ''நான்கைந்து சீசன்களில் ஆடிவிட்டேன். ஆண்டி ப்ளவரை ஆகச்சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்றே மதிப்பிடுவேன். போட்டிகளில் ஆடும் வீரர்களை மட்டும் அல்ல, ஆடாமல் வெளியில் இருக்கும் புதிய வீரர்களைக் கூட அவர் நன்றாகக் கவனித்துக் கொள்வார். அவர்களோடும் அதிக நேரத்தைச் செலவிடுவார்.

கடந்த ஆண்டு எங்கள் மீது நிறைய அழுத்தம் இருந்தது. இந்தச் சீசனில் அப்படியில்லை. இந்தச் சீசன் முழுக்க நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். அணி நிர்வாகமும் வீரர்களும் என்னை முழுமையாக நம்பினார்கள். அதற்கான வெற்றி இது.

இரண்டு முறை கோப்பையை வென்றுவிட்டோம். இப்போது கொண்டாட்டத்தில் இருக்கிறோம். ஆனால், சீக்கிரமே மூன்றாவது கோப்பையை வெல்வதை நோக்கி வேலை செய்ய ஆரம்பித்து விடுவோம்.

Rajat Patidar
Rajat Patidar

நான் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. நிகழ்காலத்தில் அணிக்காக என்ன செய்ய முடியும் என்றே நினைக்கிறேன். வெற்றி, தோல்விகளைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னுடைய 100% திறனை ஆட்டத்தில் வெளிப்படுத்த முடிகிறதா என்பதே முக்கியம்.

சமீபமாக ஆர்.சி.பி அணியின் கலாசாரம் மாறியிருக்கிறது. வீரர்களின் மனநிலை மாறியிருக்கிறது. பயிற்சியாளர் குழுவுக்குதான் முழு க்ரெடிட்டையும் கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லா வீரர்களையும் ஒரே மாதிரியாக மதிக்கிறார்கள்.

விராட் கோலியைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவர் ஒவ்வொரு முறையும் அசாத்தியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட்டைத் தாண்டி நிறைய கற்றுக்கொள்கிறோம். வலைப்பயிற்சியின்போது கூட ஒரு போட்டியில் ஆடுவதைப் போலத்தான் கோலி ஆடுவார். அந்த ஆற்றல்தான் எனக்கான இன்ஸ்பிரேஷன்.

கடந்த சீசனின் வெற்றிக்குப் பிறகு எங்களின் ரசிகர்கள் சிலரை இழந்தோம். ரசிகர்கள்கூட அல்ல, அவர்கள் எங்களின் குடும்பத்தினர். இந்தக் கோப்பையை எங்களின் ரசிகர்களுக்குச் சமர்பிக்கிறேன்'' என்றார்.

'இப்படித்தான் 2 கப் அடிச்சோம்!' - வெற்றி ரகசியத்தை விளக்கும் தினேஷ் கார்த்திக்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி Dinesh Karthikஅணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்... மேலும் பார்க்க

முதலில் தோல்வி; பின்னர், 'பேருந்தில் மின்கசிவு' - குஜராத் டைடன்ஸ் அணிக்கு அடுத்தடுத்த பிரச்னைகள்

நேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், ஆர்.சி.பி கோப்பையைக் கையிலேந்த, குஜராத் டைடன்ஸ் தோல்வியைத் தழுவினர். இந்தப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முடித்துவிட்டு, தாங்கள் தங்... மேலும் பார்க்க

'தோத்தாலும் பெருமையா இருக்கு சார்...' - குஜராத் கேப்டன் சுப்மன் கில்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.கில்தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், '180–1... மேலும் பார்க்க

'நான் விக்கெட் எடுக்கலன்னாஹேசல்வுட் எடுப்பார்... அவர் எடுக்கலன்னா...' - ரகசியம் கூறும் RCB பௌலர்கள்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.கோலிஆர்.சி.பியின் வெற்றிக்கு உதவிய சீனியர் பௌலர்களான பு... மேலும் பார்க்க

'நான் அவுட் ஆகியிருந்தாலும் இந்த டீம் பந்தயம் அடிச்சிருக்கும்!' - விராட் கோலி பெருமிதம்!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி. கோலிஆட்டநாயகன் விருதை வென்ற கோலி பேசுகையில், 'நான் இப்... மேலும் பார்க்க

வேட்டையாடிய விராட் கோலி; இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதித்த ஆர்.சி.பி!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது பெங்களூரு அணி. ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமே தொட... மேலும் பார்க்க