"தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது" - திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித...
T20 WC: முதல் சுற்றிலேயே வெளியேறியது ஆஸ்திரேலியா! - சறுக்கியது எங்கே?
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறி இருக்கிறது.
கிரிக்கெட் உலகின் 'அசைக்க முடியாத ஜாம்பவான்' என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
தொடரின் ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தற்போது முதல் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
சறுக்கியது எங்கே?
தொடரின் ஆரம்பத்திலேயே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சந்தித்த தோல்விதான் அந்த அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
இரண்டாவது போட்டியில் அயார்லாந்து அணியிடம் வெற்றி பெற்றிருந்தாலும் ஆஸ்திரேலிய அணி அடுத்து வாழ்வா-சாவா என்ற நிலையில் இலங்கையை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் குவித்தும் பந்துவீச்சில் கோட்டை விட்டது.
பதும் நிசாங்காவின் அதிரடி சதத்தால் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெளியேறிய ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவை வீழ்த்த வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது.
ஆனால், இன்று இலங்கையில் நடந்த அந்தப் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.
மழைக் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்குத் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன் மூலம் 5 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது. வெறும் 2 புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
காரணங்கள் என்ன?
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியது ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மற்றொரு அனுபவ வீரர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடாததும் அணியின் பந்துவீச்சை பலவீனப்படுத்தியது.
கடந்த 2021-ல் டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, இந்த முறை சூப்பர்-8 சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறுவது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








.jpeg)









