செய்திகள் :

UGC : `இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால்.. புதிய UGC சட்டத்துக்கு இடைக்காலத் தடை!' - உச்ச நீதிமன்றம்

post image

கல்வி நிலையங்களில், குறிப்பாக கல்லூரிகளில் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் பாகுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, 2012-ம் ஆண்டு சில விதிகளை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகும் தொடர்ந்த அநீதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதன் அடிப்படியில், நீதிமன்ற ஆலோசனையின் பேரில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்த மாத தொடக்கத்தில் 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026' என்ற விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (HEIs) பொருந்தும்.

யுஜிசி-க்கு எதிரான போராட்டம்
யுஜிசி-க்கு எதிரான போராட்டம்

இந்தப் புதிய விதி, எஸ்.சி/எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது. ஆனால், வட இந்திய மாநிலங்களில் இந்த புதிய விதிகளுக்கு எதிராக ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. மேலும், இந்தப் புதிய விதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``புதிய விதிமுறைகளின் மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது. இது நிர்வாக ரீதியிலான குழப்பங்களுக்கு வழிவகுக்கும். இந்த விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே, நிபுணர்களைக் கொண்டு இந்த விதிகளின் மொழியைச் செம்மைப்படுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால், அது சமூகத்தில் ஒரு ஆபத்தான மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, புதிய யு.ஜி.சி விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்படும். அதனால், 2012-ஆம் ஆண்டின் வழிகாட்டுதல்களே உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்" எனத் உத்தரவிட்டிருக்கின்றனர்.

`சிடி-யை எழுத்து வடிவமாக்க வேண்டும்; ரூ.10 லட்சம் செலுத்துக!' - தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி... மேலும் பார்க்க

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்த உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

SIR : ``விதிமுறைகளுக்கு உட்பட்டு..!" - உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி | Live Updates

உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..! மம்தா பானர்ஜிமேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொது... மேலும் பார்க்க

தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச ... மேலும் பார்க்க

`ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை' - மதுரை மாவட்ட நீதிமன்றம்

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்... மேலும் பார்க்க

`நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு; தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?' - உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறிப்பி... மேலும் பார்க்க