செய்திகள் :

``இது இட்லி அல்ல, 'இட்-ஸ்லைஸ்'!" - வைரல் இட்லியைத் தன் பாணியில் கலாய்த்த சசி தரூர்!

post image

வட்ட வடிவ இட்லியைத் தட்டில் வைத்து, தொட்டுக் கொள்ளக் காரசாரமான சாம்பாரும் தேங்காய்ச் சட்னியும் பரிமாறப்படும் பாரம்பரியமான காலை உணவை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால், உலகளவில் பிரபலமான பிட்சா உணவின் பாணியில் நம் ஊர் இட்லியை முற்றிலும் மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு விசித்திரமான ‘பிட்சா இட்லி’, உணவு பிரியர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எக்ஸ் தளத்தில் ஒருவர் இட்லியை பீட்சா போன்று வெட்டி என்னுடைய வெட்டும் திறன் எப்படி எனக் கேட்டிருந்தார்.

இந்த விநோதமான உணவு பரிசோதனையைப் பார்த்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், தனது (x) எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நக்கலான பதிவு இப்போது சமூக வலைத்தளங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

வைரலாகி வரும் அந்த படத்தில், ஒரு பெரிய தட்டு வடிவ இட்லி, பிட்சா துண்டுகளைப் போல முக்கோண வடிவில் நேர்த்தியாக வெட்டப்பட்டு அடுக்கப்பட்டுள்ளது.

சசி தரூர்
சசி தரூர்

சசி தரூர் இந்த பதிவை மறுபதிவு செய்து, ஆங்கில வார்த்தைகளுடன் விளையாடித் தனது பாணியில் ஒரு கமெண்ட்டை தட்டியுள்ளார். "இது இட்லி (Idli), 'இட்-ஸ்லைஸ்' (Id-slice) அல்ல" என்று அவர் பதிவிட்டுள்ள இந்த நக்கல் வரிகள் இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

மேலும், `ஒரு மென்பொருள் வல்லுநரை கிட்சன் பக்கம் வந்தால் இது தான் நடக்கும். இட்லியை இப்படி யாரும் சாப்பிட மாட்டார்கள். ஒருவேளை இத்தாலியராக இருந்தால் பீட்சா என நினைத்து இப்படி சாப்பிடலாம் (ஆனாலும் பீட்சாவுக்கு சாம்பாரை பயன்படுத்தாதீர்)' " என்றார்.

சிலர் இந்த புதிய முயற்சியைப் பாராட்டி வந்தாலும், சசி தரூரின் இந்த பதிவிற்குப் பிறகு பெரும்பாலான இணையவாசிகள் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். "உணவுகளில் புதுமை செய்யலாம், ஆனால் நம் ஊர் பாரம்பரிய இட்லியின் வடிவத்தோடு விளையாடக் கூடாது" என்று தரூரின் கருத்தை வழிமொழிந்து நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!

சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும... மேலும் பார்க்க

மகனை வாட்டிய உடல்நிலை; 36-வது மாடியிலிருந்து குதித்த இந்திய வம்சாவளி குடும்பம் - லண்டனில் சோகம்!

லண்டனில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து இந்தியத் தம்பதியினர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட... மேலும் பார்க்க

`ரூ.90,000 வாடகை கொடுத்தும் தண்ணீர் பிரச்னை'- புலம்பும் மும்பை இளைஞர் | வைரலாகும் வீடியோ!

மும்பையில் இந்த ஆண்டு இன்னும் பருவ மழை தொடங்கவில்லை. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் மும்பையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.... மேலும் பார்க்க

தேனிலவுக்கு குடும்பத்தையே அழைத்து வந்த கணவன்! - விவாகரத்து கேட்கும் மனைவி

திருமணமானவுடன் கணவன் மனைவி தம்பதியாக தேனிலவு செல்வது வழக்கம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மிகவும் அபூர்வமாக இத்தேனிலவுக்கு குடும்பத்தினரும் சேர்ந்து செல... மேலும் பார்க்க

ஈரான் வீழ்த்திய ஹெலிகாப்டரிலிருந்து தப்பிய வீரர்கள்; டிரோன் படகு மூலம் எப்படி மீட்டது அமெரிக்கா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 60 நாள்களுக்கும் மேலாக அமலில் இருந்து வந்த போர்நிறுத்தம் முடிவுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் அபாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் சுட்... மேலும் பார்க்க

`ஒரு வாரமா தூக்கமில்ல'- தொடர் மின் வெட்டு; தலையணையுடன் மின்சார அலுவலத்தில் தூங்கச் சென்ற மும்பை பெண்

மும்பையில் பருவமழை தொடங்குவதில் தாமதமாகி வருகிறது. அதேசமயம் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் மின் தேவை அதிகரித்து அடிக்கடி மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் இரவு... மேலும் பார்க்க