செய்திகள் :

`ரூ.90,000 வாடகை கொடுத்தும் தண்ணீர் பிரச்னை'- புலம்பும் மும்பை இளைஞர் | வைரலாகும் வீடியோ!

post image

மும்பையில் இந்த ஆண்டு இன்னும் பருவ மழை தொடங்கவில்லை. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் மும்பையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அதிகமான கட்டடங்கள் டேங்கர் தண்ணீரை நம்பி இருக்கின்றன. மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் வாடகைக்கு வசிக்கும் நிகில் என்பவர், தண்ணீர் பிரச்னையைச் சுட்டிக்காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி இருக்கிறது.

அவர் தனது பதிவில், தான் வசிக்கும் குடியிருப்பு கட்டட சொசைட்டியில் மாதம் ஒன்றுக்கு ரூ.70,000 வாடகை தொடங்குவதாகவும், தான் ரூ.90,000 வாடகை செலுத்துவதாகவும், இருப்பினும் குடியிருப்பாளர்களுக்கு சரியாகத் தண்ணீர் விநியோகம் இருப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டுள்ளார்.

சொகுசு குடியிருப்பு வளாகத்தில் வசித்தாலும், போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், ஒழுங்கற்ற விநியோகத்தால் அடிக்கடி தண்ணீர் கிடைக்காமல் போவதாகவும், நிகில் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்கடி தண்ணீர் எதிர்பாராதவிதமாக நின்றுவிடுவதாகவும், குடியிருப்பாளர்கள் தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ``நான் வசிக்கும் கட்டடம் 37 மாடிகளைக் கொண்ட இரண்டு டவர்கள் ஆகும். இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வளவு பெரிய குடியிருப்பு கட்டடத்திற்கு டேங்கர் தண்ணீர் தீர்வாகாது.

கட்டடத்தில் வசிப்பவர்கள் அதிக வாடகை கொடுத்தாலும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்கள் உட்பட சில நேரங்களில் தண்ணீர் விநியோகம் தடைபடுகிறது. சமையல் மற்றும் சுகாதாரம் போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவ்வளவு அதிக வாடகை செலுத்துவதை கற்பனை செய்து பாருங்கள், தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்க வேண்டும்" என்று அவர் வீடியோவில் கூறினார். இப்பதிவுக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் அனைத்து இடங்களிலும் இதேநிலைதான் என்று தெரிவித்து வருகின்றனர். மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் தொடங்காமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகத்தைக் கவலையடையச் செய்துள்ளது.

`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!

சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும... மேலும் பார்க்க

மகனை வாட்டிய உடல்நிலை; 36-வது மாடியிலிருந்து குதித்த இந்திய வம்சாவளி குடும்பம் - லண்டனில் சோகம்!

லண்டனில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து இந்தியத் தம்பதியினர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட... மேலும் பார்க்க

``இது இட்லி அல்ல, 'இட்-ஸ்லைஸ்'!" - வைரல் இட்லியைத் தன் பாணியில் கலாய்த்த சசி தரூர்!

வட்ட வடிவ இட்லியைத் தட்டில் வைத்து, தொட்டுக் கொள்ளக் காரசாரமான சாம்பாரும் தேங்காய்ச் சட்னியும் பரிமாறப்படும் பாரம்பரியமான காலை உணவை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால், உலகளவில் பிரபலமான பிட்சா உணவின் பாணியில... மேலும் பார்க்க

தேனிலவுக்கு குடும்பத்தையே அழைத்து வந்த கணவன்! - விவாகரத்து கேட்கும் மனைவி

திருமணமானவுடன் கணவன் மனைவி தம்பதியாக தேனிலவு செல்வது வழக்கம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மிகவும் அபூர்வமாக இத்தேனிலவுக்கு குடும்பத்தினரும் சேர்ந்து செல... மேலும் பார்க்க

ஈரான் வீழ்த்திய ஹெலிகாப்டரிலிருந்து தப்பிய வீரர்கள்; டிரோன் படகு மூலம் எப்படி மீட்டது அமெரிக்கா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 60 நாள்களுக்கும் மேலாக அமலில் இருந்து வந்த போர்நிறுத்தம் முடிவுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் அபாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் சுட்... மேலும் பார்க்க

`ஒரு வாரமா தூக்கமில்ல'- தொடர் மின் வெட்டு; தலையணையுடன் மின்சார அலுவலத்தில் தூங்கச் சென்ற மும்பை பெண்

மும்பையில் பருவமழை தொடங்குவதில் தாமதமாகி வருகிறது. அதேசமயம் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் மின் தேவை அதிகரித்து அடிக்கடி மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் இரவு... மேலும் பார்க்க