செய்திகள் :

மகனை வாட்டிய உடல்நிலை; 36-வது மாடியிலிருந்து குதித்த இந்திய வம்சாவளி குடும்பம் - லண்டனில் சோகம்!

post image

லண்டனில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து இந்தியத் தம்பதியினர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகெங்கும் வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள எலிஃபெண்ட் அண்ட் கேசில் பகுதியில் அமைந்திருக்கும் 45 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 27-05-2026 அன்று இந்த விபரீதம் நடந்துள்ளது.

இதில் 47 வயதான ராகேஷ் பாய், 46 வயதான அவர் மனைவி அதிதி பரல்கர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் சித் ஆகிய மூவரும் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தம்பதியின் மகன் சித், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத பல உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, பேசும் திறனை இழந்து நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை தடுப்பு மையம்

முதலுதவி மற்றும் தீவிர மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மூவரும் இறந்துவிட்டனர். இந்த மரணங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் லண்டன் மாநகரக் காவல் துறை, இதில் வெளிநபர்கள் எவருக்கும் தொடர்பில்லை என்றும், இது தற்கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது.

மும்பையில் இருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்து நிதி மற்றும் கட்டுமானத் துறைகளில் தங்களது சொந்த ஆலோசனை நிறுவனங்களை நடத்தி வந்த இத்தம்பதியினர், தங்களது மகனின் தீவிர மருத்துவ நிலைக்குப் பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் பலனளிக்காததால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

குறிப்பாக, மகனைப் பராமரித்து வந்த அதிதி, தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கடுமையான சூழல் காரணமாகவே அவர்கள் இத்தகைய விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் லண்டன் காவல் துறை தொடர்ந்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!

சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும... மேலும் பார்க்க

`ரூ.90,000 வாடகை கொடுத்தும் தண்ணீர் பிரச்னை'- புலம்பும் மும்பை இளைஞர் | வைரலாகும் வீடியோ!

மும்பையில் இந்த ஆண்டு இன்னும் பருவ மழை தொடங்கவில்லை. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் மும்பையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.... மேலும் பார்க்க

``இது இட்லி அல்ல, 'இட்-ஸ்லைஸ்'!" - வைரல் இட்லியைத் தன் பாணியில் கலாய்த்த சசி தரூர்!

வட்ட வடிவ இட்லியைத் தட்டில் வைத்து, தொட்டுக் கொள்ளக் காரசாரமான சாம்பாரும் தேங்காய்ச் சட்னியும் பரிமாறப்படும் பாரம்பரியமான காலை உணவை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால், உலகளவில் பிரபலமான பிட்சா உணவின் பாணியில... மேலும் பார்க்க

தேனிலவுக்கு குடும்பத்தையே அழைத்து வந்த கணவன்! - விவாகரத்து கேட்கும் மனைவி

திருமணமானவுடன் கணவன் மனைவி தம்பதியாக தேனிலவு செல்வது வழக்கம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மிகவும் அபூர்வமாக இத்தேனிலவுக்கு குடும்பத்தினரும் சேர்ந்து செல... மேலும் பார்க்க

ஈரான் வீழ்த்திய ஹெலிகாப்டரிலிருந்து தப்பிய வீரர்கள்; டிரோன் படகு மூலம் எப்படி மீட்டது அமெரிக்கா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 60 நாள்களுக்கும் மேலாக அமலில் இருந்து வந்த போர்நிறுத்தம் முடிவுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் அபாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் சுட்... மேலும் பார்க்க

`ஒரு வாரமா தூக்கமில்ல'- தொடர் மின் வெட்டு; தலையணையுடன் மின்சார அலுவலத்தில் தூங்கச் சென்ற மும்பை பெண்

மும்பையில் பருவமழை தொடங்குவதில் தாமதமாகி வருகிறது. அதேசமயம் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் மின் தேவை அதிகரித்து அடிக்கடி மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் இரவு... மேலும் பார்க்க