செய்திகள் :

ஈரோடு: தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பயிர்கள்; `மாற்றுச் சமூகத்தினர்தான்...'- குமுறும் பட்டியலின விவசாயி

post image

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர், அமராவதி நகரைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட விளை நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய விளை நிலத்திற்கான பாதையை அருகில் உள்ள மற்ற விவசாயிகள் தடுத்து நெல் சாகுபடி செய்ய முடியாமல் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி வந்துள்ளார்.

தீயில் கருகிய பயிர்கள்

அந்த நிலத்தில் தென்னை, வாழை மற்றும் தேக்கு மரங்களை நடவு செய்து பராமரித்து வந்திருக்கிறார். காலிங்கராயன் கால்வாயில் பாசனத்திற்கான தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தென்னை, தேக்கு மற்றும் வாழை மரங்கள் நேற்று திடீரென தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணிக்கம், தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுக்குள் கொண்டு வந்தாலும் மாணிக்கத்திற்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான மரங்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளன. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மற்ற நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் தன்னுடைய பயிர்களை தீவைத்துக் கொளுத்தியிருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து விவசாயி மாணிக்கம், "நான் பட்டியலினத்தவர் என்பதால் இங்கு விவசாயம் செய்வதைத் தடுக்க, அருகில் உள்ள நில உரிமையாளர்கள் சாதிய துவேசத்துடன் நடந்து வருகிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோல நிலத்தில் சாகுபடி செய்த சோளப் பயிர்களை தீ வைத்து எரித்தார்கள்.

தீயில் கருகிய பயிர்கள்

இந்த முறையும் 200 தென்னங்கன்றுகள், 500 வாழை மற்றும் 300 தேக்கு கன்றுகளை தீ வைத்து எரித்திருக்கிறார்கள். `எங்களுக்குச் சரிசமமாக நீ எப்படி நிலம் வைத்திருக்கலாம்?' என மிரட்டுகிறார்கள். விவசாயம் செய்வதற்கான உரிமையையும் பாதுகாப்பையும் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். கருங்கல்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன்" என்கிறார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகாரில் சிக்கிய பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டம், சிராயன்விளையைச் சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ்ராஜ் (31). ஐவுளிக்கடை உரிமையாளரான கிரேட் பிரின்ஸ்ராஜ் காதல் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவியின் பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னை இர... மேலும் பார்க்க

போலீஸ் ரெய்டு: குக்கரில் சாதத்துடன் கஞ்சாவை அவித்த இளைஞர் - காட்டிக்கொடுத்த விசில்!

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக 'ஆப்ரேஷன் தூஃபான்' செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்ற... மேலும் பார்க்க

கடலூர்: `கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா..?' - சீறிய இளம்பெண்... அடித்துக் கொன்ற முதியவர்!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மீதிக்குடியைச் சேர்ந்த காமாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

நெல்லை: `எவ்வளவு சொல்லியும் கேட்கலை...'- செல்போன் பேச்சால் ஆத்திரம்; அக்காவை கொன்ற தம்பி

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி மேல கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி என்ற மகளும், ராகுல் மற்றும் முத்துகிருஷ்ணன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம், விவசாயம... மேலும் பார்க்க

'தகரக் கதவுகள்… பூட்டு இல்லை… ஃபிரிஸர் இல்லை' - இடியும் நிலையில் அரசு மருத்துவமனை பிணவறை கட்டிடம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல், திருச்சுழி, காரியாப்பட்டி, கோவிலாங்குளம், கோபாலபுரம் உள்ளிட்ட... மேலும் பார்க்க

திருச்சி: காதலனுடன் விடுதியிலிருந்த இளம்பெண் மரணம்; போதை ஊசி காரணம்?

திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சம் உசேன்(வயது: 19). இவர், அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது யாஸ்மின் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்தப் பெண் திருமணம் உள்ளிட... மேலும் பார்க்க