செய்திகள் :

'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?

post image

வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்... - இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை.

இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால், அவரது எந்த முயற்சிக்கும் இதுவரை பலனே இல்லை.

ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்திகொண்டே தான் இருக்கின்றன.

இந்த நிலையில் தான், ட்ரம்ப் தற்போது உக்ரைன், ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் பதிவு

தனது ட்ரூத் பக்கத்தில், உக்ரைன் தலைமையை சாடி, "உக்ரைனின் தலைமை இதுவரை அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எந்த நன்றியையும் காட்டவில்லை.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கிகொண்டே தான் இருக்கிறது.

அமெரிக்கா இன்னமும் உக்ரைனுக்கு வழங்க நேட்டோவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங்களை விற்று வருகிறது.

இந்தப் போர் தொடங்கும்போது, நான் அதிபராக இருந்திருந்தால், புதின் உக்ரைனை தாக்கியிருக்கவே முடியாது" என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் பதில்

ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு உடனடியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி கூறி எதிர்வினையாற்றி உள்ளார்.

ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்காவிற்கும், அனைத்து அமெரிக்க இதயங்களுக்கும், தனிப்பட்ட முறையில் அதிபர் ட்ரம்பிற்கு உக்ரைன் நன்றி கடன்பட்டுள்ளது" என்று பதிலளித்துள்ளார்.

"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, "த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும்" - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின்... மேலும் பார்க்க

`அமைச்சர் தொகுதியில், படம் போட்டு பரிசு பொருள் விநியோகம்’ - கோவி.செழியன் மீது எழுந்த புகார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் (தனி) தொகுதி. இங்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தற்போது உயர்க்கல்வித்துற... மேலும் பார்க்க

புதுச்சேரி: "விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார்" - ஜெகத்ரட்சகன் காட்டம்

புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவ... மேலும் பார்க்க

"ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல"- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய குறி தேர்தல் க... மேலும் பார்க்க

ஆட்டத்தை தொடங்கிய மகாராஷ்டிரா பாஜக; தொட்டதற்கெல்லாம் டெல்லி சந்திப்பு! - சிக்கலில் ஷிண்டே?

மகாராஷ்டிராவில் தற்போது பா.ஜ.க, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கூட்டணி அரசு பதவியில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் சாதாரண ஒரு அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராகவும், துணை முதல்... மேலும் பார்க்க